Tirupati: திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிக்க 4 லட்சம் டிக்கெட்டுகள்! 15 நிமிடங்களில் காலி!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியானது. மொத்தம் 4,33,200 டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்பட்டன. அவை கிடுகிடுவென விற்றுத் தீர்ந்தது. இந்த தரிசன டிக்கெட்டை புக் செய்தவர்கள் இன்று மாலை 3 மணிக்கு திருமலை அல்லது திருப்பதியில் அறைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று கூட்டம் இருக்கும், இருக்காது என சொல்ல முடியாத அளவுக்கு திருமலை திருப்பதி உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய மாதந்தோறும் பல்வேறு வகையான டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. அதிலும் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்வது கட்டாயம்.
இதை விட்டால் ஏழுமலையானை இலவச தரிசனத்திலோ அல்லது நடைபாதை வழி தரிசனத்திலோ சேவிக்கலாம். அந்த வகையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட்டுகள் கடந்த 21 ஆம் தேதி முதல் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் ஏப்ரல் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை உள்ளிட்டவைகளுக்கு கடந்த 19ஆம் தேதி ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
அது போல் ஜனவரி 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு மின்னணு குலுக்கல் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியாகின. இதில் குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் ஜனவரி 21 , 23 ஆம் தேதிக்குள் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றனர்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் வசந்தோற்சவம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியானது. இந்த சேவைகளில் பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் செல்ல 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியானது.
அது போல் அங்கப்பிரதட்சணம் செய்ய நேற்று காலை 10 மணிக்கு டிக்கெட் வெளியானது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாமி தரிசனம் செய்ய இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியானது. மொத்தம் 4,33,200 டிக்கெட்டுகள் வெளியாகின. அவை 20 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்தது. இந்த டிக்கெட்டை புக் செய்தவர்கள் அறைகளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் புக் செய்யலாம்.
தரிசன டிக்கெட் புக் செய்தவர்களுக்கு மட்டுமே அறை ஒதுக்கீடு செய்யப்படும். அதிலும் யாருடைய லாகின் ஐடியில் புக் செய்தோமோ அதிலேயே புக் செய்ய வேண்டும். 4,33,200 டிக்கெட்டுகள் வெளியான நிலையில் அறையின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்படும் என்பதால் முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அறைகள் கிடைக்கும். இதற்கான கட்டணம் வெறும் 100 ரூபாய் ஆகும். ஒரு வேளை கிடைக்காவிட்டால், கீழ் திருப்பதியில் விடுதிகளில் அறைகளை புக் செய்து கொள்ளலாம். எனவே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்திலோ TTD செயலியிலோ புக் செய்து கொள்ளலாம்.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications