Tirupati: திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிக்க 4 லட்சம் டிக்கெட்டுகள்! 15 நிமிடங்களில் காலி!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியானது. மொத்தம் 4,33,200 டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்பட்டன. அவை கிடுகிடுவென விற்றுத் தீர்ந்தது. இந்த தரிசன டிக்கெட்டை புக் செய்தவர்கள் இன்று மாலை 3 மணிக்கு திருமலை அல்லது திருப்பதியில் அறைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று கூட்டம் இருக்கும், இருக்காது என சொல்ல முடியாத அளவுக்கு திருமலை திருப்பதி உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய மாதந்தோறும் பல்வேறு வகையான டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. அதிலும் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்வது கட்டாயம்.
இதை விட்டால் ஏழுமலையானை இலவச தரிசனத்திலோ அல்லது நடைபாதை வழி தரிசனத்திலோ சேவிக்கலாம். அந்த வகையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட்டுகள் கடந்த 21 ஆம் தேதி முதல் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் ஏப்ரல் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை உள்ளிட்டவைகளுக்கு கடந்த 19ஆம் தேதி ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
அது போல் ஜனவரி 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு மின்னணு குலுக்கல் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியாகின. இதில் குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் ஜனவரி 21 , 23 ஆம் தேதிக்குள் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றனர்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் வசந்தோற்சவம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியானது. இந்த சேவைகளில் பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் செல்ல 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியானது.
அது போல் அங்கப்பிரதட்சணம் செய்ய நேற்று காலை 10 மணிக்கு டிக்கெட் வெளியானது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாமி தரிசனம் செய்ய இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியானது. மொத்தம் 4,33,200 டிக்கெட்டுகள் வெளியாகின. அவை 20 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்தது. இந்த டிக்கெட்டை புக் செய்தவர்கள் அறைகளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் புக் செய்யலாம்.
தரிசன டிக்கெட் புக் செய்தவர்களுக்கு மட்டுமே அறை ஒதுக்கீடு செய்யப்படும். அதிலும் யாருடைய லாகின் ஐடியில் புக் செய்தோமோ அதிலேயே புக் செய்ய வேண்டும். 4,33,200 டிக்கெட்டுகள் வெளியான நிலையில் அறையின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்படும் என்பதால் முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அறைகள் கிடைக்கும். இதற்கான கட்டணம் வெறும் 100 ரூபாய் ஆகும். ஒரு வேளை கிடைக்காவிட்டால், கீழ் திருப்பதியில் விடுதிகளில் அறைகளை புக் செய்து கொள்ளலாம். எனவே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்திலோ TTD செயலியிலோ புக் செய்து கொள்ளலாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications