Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடுகள் 200 வெட்டி அண்டாவில் கறி விருந்து.. ஒரே நாளில் நடந்த 2 தேர் திருவிழா! நாமக்கல், தஞ்சை ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: சித்திரை மாதம் இன்று துவங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், தேர்த் திருவிழாக்களும் நடந்தன.. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடுகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. அதேபோல, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சாமி தரிசனம் செய்தனர். இதில் ஒரு சில கோயில் நிகழ்வுகளை பார்ப்போம்.

தமிழ் ஆண்டின் 12 மாதங்களில் முதல் மாதம் வருவது சித்திரை மாதம்.. வருடத்தின் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக உலகெங்கும் வாழும் தமிழரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

namakkal thanjavur 200 goats

முதல்நாளே அதிரடி

அதாவது, குரோதி வருடம் நிறைவடைந்து விசுவாவசு வருடம் ஆரம்பமாகி உளளது.. விசுவாவசு வருடத்தின் முதல் நாளான இன்று கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்திலுள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலில் புத்தாண்டு தின கொண்டாட்டம் இன்று நடந்தது..

அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத தரிசனமும், அதைத்தொடர்ந்து காய்கனிகள் படைக்கப்பட்டு சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.. இரவு 8 மணி வரை சர்வ தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இன்றைய தினத்தையொட்டி பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்கப்படுகிறது தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக திருப்பதியில் இருந்து 7 ஆயிரம் லட்டுகள் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

திருச்செந்தூர் கோயில்

அதேபோல, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணி அளவில் விஸ்வரூப தரிசனமும், 6.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

அதேபோல, தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் இன்று காலையிலேயே குவிந்துவிட்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை மற்றும் நாழி கிணற்றில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள.

மலையை குடைந்து கோயில்

அதேபோல, நாமக்கல் மலையின் மேற்குப்புறத்தில், நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்ம சாமி திருக்கோயிலும் இன்று கூட்டம் வழிந்து நிறைந்தது.. இங்குதான், லட்சுமி நரசிம்மர் மூலவர் மலையைக்குடைந்து குடவரைக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு நேர் எதிர்புறத்தில் உள்ள அனுமான் கோயிலில், 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரும், அரங்கநாதர் கோயிலில் கார்க்கோடகன் என்ற பாம்பின்மீது ரங்கநாதர் அனந்த சயன நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடவமும் பங்குனி மாதத்தில், இந்த 3 கடவுள்களுக்கும் ஒரே நாளில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. அந்தவகையில், கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தேர்விழா துவங்கப்பட்டது.

இன்று கோட்டையிலுள்ள நரசிம்ம சுவாமி தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து நாமகிரித்தாயார் மற்றும் நரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. பிறகு, தேர் சக்கரங்களுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தஞ்சாவூர் 200 ஆடுகள்

அதேபோல, தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் அருள்மிகு வீரனார் திருக்கோயில் அமைந்துள்ளது. 3 கரை சமுதாய மக்களுக்குச் சொந்தமான இந்த கோயிலில், 2 வருடங்களுக்கு ஒரு முறை கிடாவெட்டு திருவிழா நடைபெறும்.அந்தவகையில், வீரனாருக்காக நேர்ந்துவிடப்பட்ட 200 ஆடுகளை கோவில் வளாகத்தில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இரவு வெட்டப்பட்டது. பிறகு, 2000 கிலோ கறியை கமகமவென பெரிய அண்டாக்களில் சமைத்து, கறி சோறு வீரனாருக்குப் படையலிடப்பட்டது..

பிறகு, கறி சோறு கிராம மக்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்டது.கிடா விருந்தில் கோனூர் நாட்டைச் சுற்றியுள்ள 32 கிராமத்தைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் கலந்துகொண்டு வீரனாரை வழிபட்டு அசைவ உணவை சாப்பிட்டார்கள். நேற்று முன்தினம் நடந்த இந்த கிடாவெட்டு நிகழ்வும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+