சிம்ம மாத பிறப்பு.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. நெய்யபிஷேகம், லட்சார்ச்சனை
சபரிமலை: சிம்மம் மாதம் எனப்படும் ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.
நாளைய தினம் மலையாள வருடத்தின் முதல் நாளாகும். இதனால் அன்றைய தினம் சபரிமலையில் லட்சார்ச்சனை நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறக்கிறார். இன்றைய தினம் வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது. நாளைய தினம் முதல் வருகிற 21ஆம் தேதி திங்கட்கிழமை வரை தினமும் கணபதி ஜோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். அது மட்டுமின்றி படி பூஜை, உதயாஸ்தமய பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.
இந்த 5 நாட்களும் நெய் அபிஷேகமும் நடைபெறும். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்களும் நிறுவப்படுகின்றன.
நாளைய தினம் மலையாள வருடத்தின் முதல் நாளாகும். இதனால் அன்றைய தினம் சபரிமலையில் லட்சார்ச்சனை நடைபெறும். மாதாந்திர பூஜை முடிவடைந்து வருகிற 21ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது. திருவோணம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படும்












Click it and Unblock the Notifications