ஐப்பசி மாத அன்னாபிஷேகம் எப்போது? சிவனுக்கு சாத்தப்பட்ட அன்னத்தை உண்டால் என்ன பலன்?
சென்னை: ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி மற்ற மாதங்களை காட்டிலும் மிகவும் விசேஷமானது. இந்த பவுர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த ஐப்பசியில் பவுர்மணி எப்போது வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் வந்தாலே அடுத்தடுத்த விசேஷங்கள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கும். ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை மாதம் பிறந்தால் ஐயப்ப பக்தர்கள் விரதம், திருக்கார்த்திகை தீபம், மார்கழி மாதம் வந்துவிட்டால் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்டவை நடைபெறும்.

அந்த வகையில் ஐப்பசி அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமானது. மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும் சித்ரா பவுர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. அது போல் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
சிவன் கோயில்களில் தினந்தோறும் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாத பவுர்ணமி அன்று நடக்கும் அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமானதாகும். இந்த அன்னாபிஷேகத்தை கண் குளிர பார்த்தவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பார்கள்.
அது போல் கோடி சிவலிங்கங்களை பார்த்த புண்ணியமும் கிடைக்கும். இந்த ஆண்டு ஐப்பசி அன்னாபிஷேகம் நவம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த நாளுடன் ஐப்பசி மாதம் முடிந்து அடுத்தது கார்த்திகை மாதம் தொடங்குகிறது.
நவம்பர் 15ஆம் தேதி அதிகாலை 3.53 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 3.42 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. இந்த பவுர்ணமி தினத்தன்று அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்களும் இணைந்து வருகிறது.
இது போன்ற சிறப்பான நாளில் சிவன் கோயில்களில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.லிங்கம் முழுவதும் அன்னம் சாத்தப்பட்டிருக்கும். இந்த அன்னத்தை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும்.
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சந்திர பகவானின் சாபம் நீங்கப்பட்ட நாளும் ஐப்பசி மாத பவுர்ணமிதான். இந்த நாளில்தான் சந்திரனுக்குரிய தானியமான அரிசியில் சிவனுக்கு அன்னமிட்டு அபிஷேகம் செய்தால் சந்திரனால் ஏற்படும் பாதிப்புகளும் நீங்கும். பிரதோஷத்திற்கு பால், இளநீர், தேன், தயிர் உள்ளிட்டவை வாங்கித் தருவது போல் அன்னாபிஷேகத்திற்கு அரிசி வாங்கிக் கொடுத்தால் நம் வீட்டில் உணவு தட்டுப்பாடு இருக்காது.
உங்கள் வீட்டில் சிவலிங்கம் இருந்தாலும் அந்த லிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யலாம். ஆனால் வீடுகளில் அன்னாபிஷேகம் செய்தால் அந்த அன்னமானது சிவலிங்கத்தில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே இருக்க வேண்டும். பிறகு அதை நீக்கிவிட்டு வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக உண்ணலாம்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications