பௌமாஸ்வினி.. செவ்வாய் தோஷம் இருக்கா? அம்மனை இன்று வழிபட்டால் சொந்த வீடு கட்டும் யோகம் தேடி வரும்
சென்னை: செவ்வாய் கிழமை அஸ்வினி நட்சத்திரம் கூடிய சுபதினத்தை தான் பெளமாஸ்வினி என்று பெரியோர்கள் தேவி வழிபாட்டை செய்தனர்.
பௌமன் என்றால் பூமியின் புதல்வர் செவ்வாய். அங்காரகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாள் பௌமாஸ்வினி புண்யகாலம் எனப்படுகிறது. இந்த நாளில் அம்மனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும் வீடு கட்டும் யோகம் தேடி வரும்.
சில நட்சத்திரங்களும் கிழமைகளும் சேரும் போது, அந்த நாட்கள் அமிர்த சித்தி யோக தினங்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட விசேஷமான புண்ணிய தினங்களில் தெய்வங்களை பூஜித்தால் மிகுந்த பலன் கிடைக்கும். அந்த வகையில் ஒரு சிறப்பு தினம் தான் பௌமாஸ்வினி.
இன்றைய தினம் செவ்வாய்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்து வந்துள்ளது.

அம்மனுக்கு உகந்த நாளான பெளமாஸ்வினி தினத்தில் தேவியின் தோற்றத்தைப் பார்த்து வியந்த தேவர்கள், யார் நீ என்று கேட்பதாகவும், தேவி அதற்கு பதில் சொல்லும் விதமாக, தானே ப்ரும்ம ஸ்வரூபமாகவும், ப்ரக்ருதியாகவும், ஆனந்தமாகவும், விக்ஞானமாகவும், பஞ்சபூதங்களாகவும் இருப்பதாக சொல்கிறாள். அதேசமயம் , இவைகளுக்கு எதிர்மறையாக உள்ள அப்ரும்மம், அவிக்ஞானம், அபஞ்ச பூதமாக இருப்பதும் நானே என்று சொல்கிறாள். ருத்ர, வசுக்கள், ஆதித்ய, விஸ்வதேவர்கள், தேஜஸ், மித்ர வருண, அக்னீ, அஸ்வினிகள் (இருவர்) - அதாவது தேவர்கள் அனைவரின் சக்தியும் நானே என்று சொல்லவும் தேவர்கள் அவளை வணங்குகின்றனர்.
இந்த ஆண்டு இன்றைய தினம் பௌமாஸ்வினி புண்ணிய காலமாகும். இன்று மாலையில் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். ஈசான்ய மூலையில் சுத்தம் செய்து ஒரு பலகையில் கோலமிட்டு, அதன் மேல்தீபம் ஏற்றி, ஒன்பது முறை துர்கா சப்த ச்லோகி பாராயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாராயணம் முடியும்போது, ஒரு ப்ரதக்ஷிண நமஸ்காரம், இப்படியாக ஒன்பதுமுறை செய்ய வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அந்த தோஷ நிவர்த்திக்கான, வழிபாட்டுக்குரிய நாளாக இந்த நாளைக் கருதுகின்றனர். எத்தனை முயன்றாலும் வீடு கட்ட நிலம் வாங்க முடியாதவர்கள், சொந்த நிலத்தில் வீடு கட்ட முடியாதவர்கள் இந்த விரதம் இருப்பதன் மூலமாக விரைவில் நிலம் வாங்கி வீடு கட்டலாம். சொந்த வீடு கட்டியும் பிரச்சினையில் சிக்கியுள்ளவர்கள், நிலம் வாங்கியும் சிக்கலில் சிக்கி தவிப்பவர்கள் இன்றைய தினம் அம்மனை வழிபடலாம்.
மிகவும் அரிதான இந்த நன்னாளில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களும் அதிகமான நன்மையைத் தரும். ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக லக்ஷ்மி நரசிம்மரை வழிபட வேண்டும். செவ்வாய் இரத்தத்தைக் குறிக்கின்றவர் என்பதால் இரத்தக் குறைபாடு நோய் உள்ளவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து நோயிலிருந்து விடுதலை பெறலாம்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications