மார்கழி திருவாதிரை.. ஆடல்வல்லான் நடராஜரின் ஆருத்ரா தரிசனம்.. தயாராகும் சிதம்பரம்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வரும் 18 ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வரும் 27ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.
மார்கழி திருவாதிரை நாளில் சிவபெருமான் தம் திருநடனக் காட்சியை பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். இதனையே ஆருத்ரா தரிசனம் என்கிறார்கள். இதையடுத்து நடராஜர் கோயில் உள்பட சிவபெருமானின் பஞ்ச சபைகளிலும் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா எனப்படும் திருவாதிரை திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

நடராஜருக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இது உஷ்ணம் மிகுந்த நட்சத்திரமாகும். அதோடு வெம்மை மிகுந்த சுடலையின் சூடான சாம்பலை திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியையும் ஏந்தியிருப்பதால் நடராஜர் கடுமையான வெப்பத்தால் சூழப்பட்டிருக்கிறார். இந்த வெப்பத்தை தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சித்திரை மாத திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாத திருவாதிரை ஆகிய நாட்களில் நிகழ்த்தப்பெறும் திருமஞ்சனங்கள் நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுகின்றன. மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசியில் நடராஜருக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.
ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. கடைசி பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம் என போற்றப்படுகிறது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகும். இந்த மாத திருவாதிரை நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக ஐதீகம். அப்போது சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சம் திருவிழாவும் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்க்கான மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வரும் 18 ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
வரும் 26ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வரும் 27ஆம் தேதி புதன்கிழமை நடைபெற இருக்கிறது. இதையொட்டி அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்த பின்னர், காலை 6 மணி முதல் திருவாபரண அலங்கார காட்சி நடைபெறுகிறது.
பின்னர் மதியம் 2 மணிக்கு ஆயிரம்கால் மண்டபமான ராஜசபையில் நடராஜரும், அம்பாளும் எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து 28ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் உலா வருதல், 29ஆம் தேதி ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும்.
ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 27ஆம் தேதி அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 6 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். அவசர அலுவல்களை கவனிக்கும், பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications