ஸ்கூல் திறக்க போகுது! ஆனாலும் திருப்பதியில் கூட்டம்! தர்ம தரிசனத்திற்கு இத்தனை மணி நேரமா?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய 12 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் 79,398 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகிலேயே பணக்கார கடவுள் என்று ஏழுமலையான் அழைக்கப்படுகிறார். தினசரியும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.
திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. மேலும் வைர, தங்க, வெள்ளி நகைகளும் காணிக்கையாக கிடைக்கின்றன. பல பக்தர்கள் தங்களின் சொத்துக்களையும் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிடுகின்றனர். இப்படி திருப்பதி பணக்கார தெய்வம் என சொல்லப்பட்டாலும் புரட்டாசி மாதமும் சனிக்கிழமைகளிலும் ஏழைகள் போடும் படையலை பெருமாள் ஏற்று அவர்களின் வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தை காக்கிறார். கோடி கோடியாக யார் கொட்டி கொடுத்தாலும் ஏழைகளுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் திருமலை ஏழுமலையானை காண லட்சக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இதனால் திருப்பதியில் கூட்டம் அலைமோதுகிறது. அது போல் வார விடுமுறை என்பதாலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் பல மணி நேரம் காத்திருந்தே ஏழுமலையானை தரிசித்தனர்.
அது போல் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் எடுத்தவர்கள் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். அது போல் உண்டியல் வசூலும் அதிகமாகவே இருந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோயிலில் நேற்று 79,398 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 43,557 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ. 2.90 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 22 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 12 மணி நேரத்திற்கு பிறகே ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள் என தெரிகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமலை திருப்பதி ஏழுமலையானை 67,320 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். ரூ 4.03 கோடி காணிக்கை செலுத்தியிருந்தனர். இவர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications