Gold: தங்கத்துடன் "இந்த" பொருளையும் சேர்த்து வாங்குங்கள்! கோல்டா குவியும்! எந்த ஓரையில் வாங்கணும்?
சென்னை: தங்கம் வாங்கும் போது அத்துடன் சில பொருட்களை சேர்த்து வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் தங்கம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார்கள். தங்கம் வாங்கும் போது நல்ல நேரம் பார்த்து போவது ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு நேரத்தில் வாங்கினால் லட்சுமி கடாட்சம் என்று கூறுகிறார்கள்.
சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய தினம் தங்கம் விலை சவரன் ரூ 67,200 ஆகும். அது போல் வெள்ளியின் விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனாலேயே தங்கத்தின் விலை குறைவாக இருக்கும் நேரத்தையும் கருத்தில் கொண்டு நகைக் கடைக்கு கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
எந்த நாளில் தங்கம்
இந்த நிலையில் எந்த நாளில் தங்கம் வாங்க செல்கிறோமோ அந்த நாளில் தங்கத்துடன் குறிப்பிட்ட பொருளை வாங்கினால் தங்கம் மென்மேலும் சேரும் என்பது ஐதீகம். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
எந்த கிழமையில் வாங்கலாம்
திங்கள்கிழமை- இந்த நாள் செல்வ வளத்திற்கான அடையாளம் ஆகும். இந்த நாளில் தங்கம் வாங்கும் போது துளசி, கற்பூரம், லவங்கம், பச்சை கற்பூரம், பச்சை பயிறு ஆகியவற்றை வாங்க வேண்டும். இதனால் மன நிம்மதி, குடும்ப சாந்தி, தெய்வ அனுகிரகத்தை தரும்.
செவ்வாய்க்கிழமை- சுப்பிரமணியனுக்கான நாளாகும். இந்த நாளில் தங்கம் வாங்கும் போது துவரம் பருப்பு சேர்த்து வாங்க வேண்டும். வாழ்க்கையில் தைரியம், வெற்றி, உடல் ஆரோக்கியத்தை அள்ளித் தரும்.
புதன்கிழமை- ஞானத்திற்கும் வியாபார வளர்ச்சிக்கும் பொறுப்பான நாளாகும். தங்கம் வாங்கும் போது பச்சை பயிறு சேர்த்து வாங்க வேண்டும். விவாகரத்து, வாக்குவாதங்கள், மனதளவிலான குழப்பங்களை தீர்க்கும்.
வியாழக்கிழமை- கல்வி, குரு, கிருபை, ஆன்மீக முன்னேற்றத்திற்கு சிறந்த நாளாகும். தங்கம் வாங்கும் போது கருப்பு மூக்கடலையை சேர்த்து வாங்க வேண்டும். இது ஞானத்தையும் பாக்கியத்தையும் தரும்.
வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமியின் நாள். அன்றைய தினம் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். அன்றைய தினம் தங்கம் வாங்கும் போது அரிசியையும் சேர்த்து வாங்குவது நல்லது., லட்சுமி கடாட்சம், செல்வ சேர்க்கை, வீட்டில் அமைதியை உறுதிப்படுத்தும்.
சனிக்கிழமை- நீண்ட முயற்சியின் எதிரொலிதான் இந்த சனிதக்கிழமை! இந்த நாளில் தங்கம் வாங்கும் போது பச்சை பயிறையும் சேர்த்து வாங்க வேண்டும். அப்போது அதை அணிந்தவர்களுக்கு தீமைகள் விலகி, சாதகமான சக்தியை கொடுக்கும்.
ஞாயிற்றுக்கிழமை-சூரிய பகவானின் நாளாகும். அதிகாரம், புகழ், சக்தி ஆகியவையின் தொடர்புடையது. இந்த நாளில் தங்கம் வாங்கும்போது துளசி, கற்பூரம், லவங்கம் போன்றவற்றையும் சேர்த்து வாங்கினால், நன்மை அதிகரிக்கும். இது நற்பயனை கொடுக்கும். உயர்வு நிலை மற்றும் வம்சம் பாக்கியம் கொடுக்கும்.
தங்கத்தை எங்கு வைக்க வேண்டும்
நீங்கள் வாங்கும் தங்கத்தை கண்ணாடி பெட்டியில் வைத்திருக்க வேண்டும். அதனுடன் அந்த நாளுக்குரிய பொருளையும் வைத்திருக்க வேண்டும். அது போல் தங்கம் வாங்க ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரத்திலும் அஷ்டமி, நவமி இல்லாத நாளிலும் போய் வாங்குகிறோம்.
நல்ல நேரம் எது
நல்ல நேரத்தை கருத்தில் கொண்டு வாங்குவதை போல் சுக்கிர ஓரையில் தங்கம் வாங்கலாம். அதை காலண்டரில் அல்லது கூகுளில் பார்த்தால் தெரியும். சுக்கிர ஓரை உங்களுக்கு தோதுபடாவிட்டால் குரு ஓரையில் போய் வாங்கலாம். இப்படியாக தங்கத்தை ஐதீகத்துடன் வாங்கி பலனடையுங்கள்.
மளிகை கடையில் இல்லை
தங்கத்தை என்ன மளிகை கடையிலா வாங்குகிறோம் என கேட்காதீர்கள். இதன் பொருள் என்னவெனில் ஒன்று நீங்கள் வாங்கும் நாளுக்குரிய பொருளை கடைக்கு சென்று வாங்கிக் கொண்டு அதை பையில் வைத்துக் கொண்டு நகைக் கடைக்கு செல்லுங்கள்.
பூஜை அறை
இல்லாவிட்டால் பாதுகாப்பாக உணர்கிறீர்கள் என்றால் தங்கம் வாங்கிக் கொண்டு அந்த நகையுடனேயே மளிகைக் கடையில் அந்த நாளுக்குரிய பொருளை வாங்கலாம். அதுவும் இல்லாவிட்டால் தங்கத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு பிறகு மளிகை கடைக்கு போய் அந்த நாளுக்குரிய பொருளை வாங்கலாம்.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம்.. இப்போது அடகு வைப்பது புத்திசாலித்தனமா? ‘பவுன்’ கணக்கு இதோ -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications