தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள்.. பில்லி, சூனியம், செய்வினை .. பாதிப்பு நீங்க பரிகாரம்
சென்னை: செய்வினை செய்பவர்கள் ஒருவரின் தலைமுடியை வைத்தும் காலடி மண்ணை எடுத்தும் கெடுதல் செய்வார்கள். எனவேதான் நம்முடைய முன்னோர்கள் நகத்தை வெட்டியும், தலைமுடியை சீவி எடுத்து அடுத்தவர்கள் பார்க்கும் வகையில் வெளியில் வீசி எரியக்கூடாது என்று சொல்வார்கள்.
நம் வீட்டில் செய்வினை இருக்கிறது என்பதை சில அறிகுறிகள் உணர்த்தும் பாதிப்பு நீங்க என்ன பரிகாரம் செய்வது என்று பார்க்கலாம்.
நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து சிலருக்கு பொறாமை ஏற்படும். குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால் சிலருக்கு பிடிக்காது. குடும்ப ஒற்றுமையை குலைக்கவும், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கவும் சிலர் முயற்சி செய்வார்கள். அதற்கு அவர்கள் தேர்வு செய்யும் வழி செய்வினை, பில்லி, சூனியம். சமீபத்தில் ஒரு டிவி சீரியலில் கூட திருமணத்தை நிறுத்த கோவிலில் பூஜை செய்வார்கள்.

சிலர் நடந்து சென்று கொண்டிருக்கும் போதே காலில் கல் தடுக்கி ரத்தம் வரும். பெண்களுக்கு காய்கறி வெட்டும் போதோ அல்லது சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்கும் போது காயங்கள் ஏற்படும். நிலை வாசல் கதவில் தலை இடிக்கும். வீட்டின் குடும்பத் தலைவருக்கு கட்டை விரல் அடிக்கடி காயம் ஏற்படும். இப்படி நடந்தால் உங்கள் வீட்டில் உள்ள குல தெய்வம் உங்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தை உணர்த்துகிறது என்று அர்த்தம். காரணம் குல தெய்வம் நம்முடைய நிலை வாசலில் வசிக்கிறது என்பது ஐதீகம்.
நமக்கு யாரும் செய்வினை செய்து விடக்கூடாது வீட்டிற்குள் எந்த தீய சக்தியும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக குல தெய்வம் நம்முடைய வீட்டினை காத்துக்கொண்டிருக்கிறது. மேலும் சில அறிகுறிகள் செய்வினை இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தும். சிலருக்கு மாடுகள் கனவுகளில் வரும்
நம்முடைய வீட்டிற்குள் காளை மாடு நுழைவது போல கனவு வந்தால் ஏதோ கெட்ட சக்தி வீட்டிற்குள் இருக்கிறது என்பதை உணர்த்துகிறதாம்.
பல்லி, காகம் இரண்டுமே இறை சக்தி மிக்கவை. பல்லிகளின் சத்தம் நல்லதை சொல்லும் என்று முன்னோர்கள் நம்புவார்கள். நம் வீட்டில் பல்லி நடமாட்டமே இல்லை என்றால் அந்த வீட்டில் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம். அதே போல பல்லிகள் நம் வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் இறந்து கிடந்தால் அது நம்மை காப்பாற்றுவதற்காக தனது உயிரை தியாகம் செய்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதேபோல, வீட்டுப் பக்கம் காகமே வராமல் இருப்பதும் சில அபசகுணம் எனக் கூறப்படுகிறது. சாம்பிராணி வாசமற்றுப் போவதும் நம் வீட்டில் ஏதோ தீய சக்தியின் ஆதிக்கம் இருப்பதற்கு அறிகுறியாக கருதப்படுகிறது.
நம்முடைய வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் திடீரென நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும். ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்றவைகளை வளர்க்கும் போது நமக்கு இருக்கும் செய்வினைக் கோளாறுகள், வளர்ப்புப் பிராணிகளை தாக்கும் என்ற நம்பிக்கை ஆன்மீகத்தில் உண்டு. வளர்ப்புப் பிராணி உயிரிழப்பது நமது மனதிற்கு கஷ்டத்தை தரக்கூடியதுதான் என்றாலும் நம்மை காக்க அந்த வாயில்லாத ஜீவன்கள் உயிரை தியாகம் செய்திருக்கிறது என்று அர்த்தமாகும்.
நம்முடைய வீட்டுத் தோட்டத்தில் நன்றாக செழித்து வளர்ந்த செடிகள் காய்ந்து போகும். அதுவும் கூட செய்வினை கோளாறு இருப்பதற்கான அறிகுறிகள் என்று சொல்வார்கள். குல தெய்வம் கோவிலுக்குச் செல்வது தாமதமாவதற்கு செய்வினைக் கோளாறு காரணமாக இருக்கலாம் என ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஒருவருக்கு ஏவல், பில்லி, சூனியம், செய்வினை செய்ய வேண்டும் நினைப்பவர்கள் அவர்களின் காலடி மண்ணை எடுப்பார்கள். அதே போல தலைமுடி, நகங்களை எடுப்பார்கள். எனவேதான் செருப்பு போடாமல் வெளியே நடக்க வேண்டாம், தலைமுடி, நகங்களை வெட்டி யாருக்கும் தெரியாத வகையில் கீழே போடக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
செய்வினை கோளாறு இருப்பவர்கள் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு திடீரென கடும் உடல் சோர்வு ஏற்படும். முகம் பொலிவிழந்து பசி ஏற்படாமல் உடல் நலம் குன்றிப்போகும். சிலருக்கு கை, கால்களில் அரிப்பு அதனால் புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும். மாத்திரை, மருந்துகள் எடுத்தாலும் முன்னேற்றம் இருக்காது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் கேட்கும். சாப்பாட்டில் அடிக்கடி முடி, சின்னச் சின்ன கற்கள் தென்படும். இவ்வாறான அறிகுறிகள் கெட்ட சக்தியின் ஆதிக்கம் இருப்பதை உணர்த்துகிறது.
நமக்கு செய்வினை கோளாறு இருப்பதாக உணர்ந்தால் நாம் நம்முடைய குல தெய்வத்திடம் சரணடைய வேண்டும். இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் மனமுருகி வேண்டினால் பாதிப்புகள் குறையும். மாரியம்மன், காளியம்மன் கோவிலில் எலுமிச்சை வைத்து அபிஷேகம் செய்து அதனை வீட்டு நிலை வாசலுக்கு மேலே கட்டித் தொங்கவிடலாம். இதன்மூலம், தீய சக்திகள் வீட்டை விட்டு வெளியேறிவிடும். செய்தார்க்கு செய்த வினை.. எய்தார்க்கு எய்த வினை.. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று சொல்வார்கள். நாம் ஒருவருக்கு செய்வினை செய்தால் அது நமக்கே பாதிப்பை ஏற்படுத்தும் எனவே ஒருவர் கெட்டுப்போக வேண்டும் என்று நினைத்து செய்வினை செய்பவர்களுக்கு அது பூமராங் போல திரும்பி விடும் கவனம். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications