ஏழுமலையான் பக்தர்களே..அங்கப்பிரதட்சணம் செய்ய ஆன்லைன் டிக்கெட் ரிலீஸ்..உடனே புக் பண்ணுங்க
ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இலவசமாக அவற்றை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு திருமலையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் டோக்கன்கள் பெறுவதற்கு பக்தர்கள் 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த 2020 மார்ச் 20ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டண சேவைகளில் பங்கு பெறவும், அங்கப்பிரதட்சணம் செய்வதற்கும் அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது.
கொரோனா குறைந்ததை அடுத்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் அங்கப்பிரதட்சணம் செய்யவும் கட்டண சேவைகளில் பங்கு பெறவும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு திருமலையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் டோக்கன்கள் பெறுவதற்கு பக்தர்கள் 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.
எனவே இனிமேல் அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் பெற வரிசையில் காத்திருக்காமல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் மாதம் அங்கப்பிரதக்ஷணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளன.
இது தவிர இம்மாதம் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை அங்கப்பிரதட்சணம் செய்ய தேவையான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் www.tirupatibalaji.gov.inஎன்ற இணையதளத்தில் இலவசமாக அவற்றை முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளன்று சுவாமியை தரிசித்து வருகின்றனர். இதில் குறிப்பாக ரூ. 300 சிறப்பு தரிசன டோக்கன்களுக்கு நடுத்தர வர்க்க பக்தர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இம்மாதம் பிப்ரவரியில் வரும் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான ரூ. 300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகள் வரும் 13ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வழங்கப்பட உள்ளதாக ருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications