பர்ஸில் பணம் தங்கணுமா? கொடுத்த கடன் திரும்ப வரணுமா? வீட்டில் வசம்பு இருக்கா? கல் உப்பு? ஈஸி பரிகாரம்
சென்னை: சிலருக்கு எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் வீட்டில் தங்காது.. அதேபோல, பிறருக்கு கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியாமல் இழுத்தடித்தவாறே இருக்கும். இவைகளுக்கெல்லாம் எளிய பரிகாரங்கள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளன.
பொதுவாக வீடு என்றாலே பணம் செலவாகி கொண்டேயிருக்கும். அதிலும் வரவைவிட செலவு எகிறிவிடும். இதனால் குடும்பத்தில் நிம்மதியின்மை, தம்பதிக்குள் தகராறு, குடும்பத்தில் குழப்பம், பெரியவர்களுடன் மனஸ்தாபம் போன்றவை ஏற்படும்.

இதற்கெல்லாம் வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல்களும் ஒரு காரணமாகும்.. கண் திருஷ்டி, பில்லி, சூனிய கோளாறுகள் போன்ற தீயசக்திகள் நமக்கே தெரியாமல், வீட்டிற்குள் நுழைந்து ஆட்டிப்படைக்கும். இதுபோன்ற சிக்கல்கள் இருந்தால், 2 வகையான எளிய பரிகாரங்களை செய்யலாம். இதன்மூலம் பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.
கடன் பிரச்சனை: முதலாவதாக, கடன்பிரச்சினை தீர செவ்வாய்கிழமை, செவ்வாய் ஹோரையில் பரிகாரம் செய்யலாம். வீட்டு பூஜையறையில் மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் நினைத்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு 3 கை பிடி அளவு கல் உப்புக்களை தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ள வேண்டும். இதற்காக புதிய கல் உப்பு பாக்கெட் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் வாங்கிவைத்துக்கொள்வது நல்லது.
பூஜையறையில் உட்கார்ந்து, 3 முறை உங்களுடைய உள்ளங்கை நிறைய, கல் உப்பினை கிண்ணத்திலிருந்து எடுத்து, மஞ்சள் துணியில் வைக்க வேண்டும். இப்படி 3 முறை உப்பை எடுக்கும்போது, கடன் பிரச்சனை,. பணப்பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
பூஜையறை: பிறகு, உப்பு வைக்கப்பட்டுள்ள மஞ்சள் துணியை முடிச்சு போட்டு கட்டி, இந்த முடிச்சினை மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடவேண்டும். ஒரு வாரம் கழித்து வரக்கூடிய செவ்வாய்கிழமையில், செவ்வாய் ஓரையில், பூஜை அறையில் இருக்கக்கூடிய கல் உப்பை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு கரைக்க வேண்டும்.
மஞ்சள் துணியில் கட்டியுள்ள கல் உப்பை, உள்ளங்கைகளால் எடுத்து 3 முறை தண்ணீரில் கரைக்கும்போதும், கடன் தொல்லையும் இதுபோல கரைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கரைக்க வேண்டும். இறுதியில், உப்பு தண்ணீரை கால்படாத இடத்தில் கொட்டிவிடலாம். இதனால் விரைவில் பலன் கிடைக்கும்.
மஞ்சள் தூள்: அதேபோல, சிவன் கோவிலுக்கு பிரம்ம முகூர்த்த வேளையில் சென்று, பைரவர் சன்னதிக்கு முன்பாக ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்து, வழிபடலாம். இதற்கு மஞ்சள் தூளை தண்ணீரில் குழைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு குச்சியால், இந்த மஞ்சள் நீரை தொட்டு, உங்களுக்கு பணம் தர வேண்டியவரின் பெயர், தொகையை ஒரு வெற்றிலையில் எழுத வேண்டும்.
இப்படி எழுதியதை பைரவர் பாதத்திற்கு அருகில் வைத்து, "ஓம் வம் பைரவாய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். தினமும் இப்படி பைரவர் சன்னதியில் சொல்லும்போது, முந்தைய நாள் வெற்றிலையை நீர் நிலையிலோ அல்லது கால் படாத இடத்திலோ போட்டு விட்டு, அடுத்த நாள் வேறு எழுதி வைக்கலாம். இதனால், உங்கள் பணம் விரைவில் உங்களை வந்து சேரும்.
வசம்பு முடிச்சு: அதேபோல, ஒரு வெள்ளை துணியில் 2 துண்டு வசம்பு, 2 ஏலக்காய், 2 கருப்பு ஏலக்காய், சிறிது பச்சை கற்பூரம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து முடிச்சு போல கட்டி, பணம் வைக்கும் பெட்டி அல்லது இடத்தில் வைக்கலாம்.. இந்த பொருட்களுக்கெல்லாம் பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்பதால், பணம் தடையின்றி வரத்துவங்கும். வீட்டின் முன்வாசலிலோ அல்லது பின்வாசலிலோகூட இந்த முடிச்சினை கட்டி வைக்கலாம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications