Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gokulashtami 2025: கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி எப்போது? பூஜை செய்ய உகந்த நேரம் எது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? எந்த நாளில் வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது குறித்தெல்லாம் நாம் பார்க்கலாம்.

இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: கோகுலாஷ்டமி என்று வருகிறது, கிருஷ்ண ஜெயந்தி என்று வருகிறது? இந்த மாதமா இல்லை அடுத்த மாதமா என்பது போன்ற நிறைய கேள்விகள் இருக்கின்றன. கிருஷ்ண ஜெயந்திக்கும் கோகுலாஷ்டமிக்கும் என்ன வேறுபாடு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

spirtuality gokulashtami

கிருஷ்ணர் பிறந்த அந்த அற்புதமான நாள் ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் வசு தேவருக்கும் தேவகிக்கும் 8ஆவது குழந்தையாக பிறந்தார். அப்போ ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் வர வேண்டும். இந்த மூன்றும் சேர்ந்து வருவது அபூர்வமான ஒன்று. சில நேரங்களில் ஆவணியில் இல்லாமல் ஆடி மாதத்தில் அஷ்டமி எனும் திதி வந்துவிடும். ஆனால் ரோகிணி நட்சத்திரம் ஆவணி மாதத்தில்தான் வரும். இதுதான் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

நட்சத்திரம்

ஒருவரது பிறந்தநாளை நாம் கொண்டாடுவது நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படக் கூடியது. தெய்வீகமான அந்த அவதார புருஷனாக எல்லோருக்கும் அருள் புரிய பரமாத்வாக அவதாரம் செய்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து ரோகிணி என்று வருகிறதோ அன்று கொண்டாடப்படுவது கிருஷ்ண ஜெயந்தி என்பதாகும்.

அஷ்டமி திதி

அஷ்டமி என்பது கிருஷ்ணரின் திதி, அவருடைய திதியை கணக்கிட்டு அவரது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்றால் கோகுலாஷ்டமி என்று பெயர். தமிழகத்தில் கோயில்களில் அதிகமாக கிருஷ்ண ஜெயந்திதான் கொண்டாடப்படுகிறது.

எதை கொண்டாடுவது

ஆனால் வடஇந்தியாவில் கோகுலாஷ்டமியை விமரிசையாக கொண்டாடுவார்கள். கோகுலாஷ்டமியில் கண்ணனுக்கு விரதமிருந்து கண்ணனுக்கு கால் தடம் போட்டு அவருக்கு பிடித்த பொருட்களை வைத்து எங்க வீட்டுக்கு வா என பலரும் வழிபாடு நடத்துவர். ஒரு சிலர் கிருஷ்ண ஜெயந்தியைத்தான் கொண்டாடுவார்கள். அவரவர் வழக்கப்படி கொண்டாடிக் கொள்ளுங்கள்.

எந்த நேரத்தில் வழிபாடு

கோகுலாஷ்டமி என்பது ஆகஸ்ட் 16 ஆம் தேதி அதிகாலை 1.41 மணி முதல் இரவு 11.13 மணி வரை உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி என்று வருகிறது என்றால் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வருகிறது. கோயில்களில் செப்டம்பர் 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும்.

கிருஷ்ண ஜெயந்தி 2025

செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அஷ்டமி திதியானது காலை 9.16 மணிக்கு தொடங்குகிறது. ரோகிணி நட்சத்திரமானது பிற்பகல் 1.17 மணிக்கு தொடங்குகிறது. ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதியில் வழிபாடு செய்ய நினைத்தால் செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.45 மணி வரை வழிபாடு செய்யலாம்.

கோகுலாஷ்டமி 2025

செப்டம்பர் 15 ஆம் தேதி பாஞ்சராத்திர ஜெயந்தி என கோயில்களில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 16 ஆம் தேதியும் இந்த கொண்டாட்டம் தொடர்கிறது. கோகுலாஷ்டமி கொண்டாடுவதாக இருந்தால் ஆகஸ்ட் 16ஆம் தேதி அஷ்டமி திதி முழுவதும் இருக்கிறது.

எப்போது கொண்டாடலாம்?

காலை 10.30 மணி முதல் 11.50 மணி வரை வழிபாடு செய்யலாம். மாலை 6 மணிக்கு மேலும் வழிபாடு செய்து கொள்ளலாம். இந்த இரண்டில் எந்த நாளில் வணங்கினாலும் நன்மைதான். கோகுலாஷ்டமியையும் கிருஷ்ண ஜெயந்தியையும் பிரித்து பார்க்க முடியாது. குழந்தை பேறுக்காக காத்திருப்போருக்கு இந்த நாள் ஒரு வரபிரசாதம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+