குரு பூர்ணிமா... இறைவனுக்கும் மேலானவர் குரு... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சென்னை: இறைவனுக்கும் மேலானவராக வணங்கப்படுகிறார் குரு. நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டிய குருவிற்கு வணக்கம் செலுத்தும் நாளாக குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. குரு பூர்ணிமாவை முன்னிட்டு இன்றைய தினம் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
குரு பூர்ணிமா இந்தியா, நேபாளம் நாடுகளில் உற்சாகமுடன் கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில், மக்கள் இந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு குரு பூர்ணிமா தேதி இன்று ஜூலை 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

குரு ஒரு ஆசிரியர், வழிகாட்டி மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்துகிறார். குரு என்ற சொல் கு மற்றும் ரு என்ற இரு சொற்களிலிருந்து உருவானது . சமஸ்கிருத மூலமான கு என்பது இருள் அல்லது அறியாமை மற்றும் ரு என்று பொருள்படும் அந்த இருளை அகற்றுபவரைக் குறிக்கிறது. எனவே, நமது அறியாமை என்னும் இருளை நீக்குபவர் குரு.
யோக மரபில், சிவன் ஆதி குருவாக அல்லது முதல் குருவாக மாறிய நாள் குரு பூர்ணிமா என்று கூறப்படுகிறது. அவர் சப்தரிஷிகளுக்கு யோகத்தை இந்த நாளில்தான் அனுப்பினார் என்று நம்பப்படுகிறது. குரு பூர்ணிமா தினமான இன்று பிரக்யாராஜ் திருவேணி சங்கமத்தில் ஏராளமானோர் இன்று புனித நீராடினர்.

குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் இன்றைய தினம் தங்களை வழி நடத்திய குருவிற்கு வணக்கமும் வாழ்த்தும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications