Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூஜை அறையை முதல் நாள் இரவே சுத்தம் செய்து! மறுநாள் பூஜை செய்வது சரியா? தவறா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூஜை அறையை முதல் நாள் இரவே சுத்தம் செய்து, அடுத்த நாள் அப்படியே பூஜை செய்வது சரியா தவறா? என்ற குழப்பம் பலருக்கு நீண்ட காலமாக இருக்கும். ஆனாலும் காலில் சக்கரத்தை கட்டி சுற்றாத குறையாக வேலை வேலை என ஓடிக் கொண்டிருப்பதால் அது குறித்து அதிகம் சிந்திக்க முடியாமல் இருக்கிறது.

இதுகுறித்து ரங்கா என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "தினமும் இதே வேலையா போச்சு, யார் தான் இப்படி மாமிசத்தை எம்பிரான் முன்னால் சிந்தி விட்டு செல்கிறாரோ?"

spirtuality pooja

- அலுத்துக் கொண்டே சுத்தம் செய்தார் அந்த வேதியர்.

கொண்டு வந்த குடத்து நீரை ஸ்வரம் தப்பாமல் ருத்ர ஜபம் சொல்லி அபிஷேகம் செய்து, பக்தியுடன் லிங்க திருமேனிக்கு அலங்காரமும் செய்து, வில்வ மாலை சார்த்தி அழகு பார்த்தார்.

திருஷ்டி படாமல் இருக்க எம்பிரானுக்கு தீப ஆராதனையும் செய்து நெற்றியில் மண் ஒட்ட விழுந்து வணங்கினார்.

இன்றைக்கு ஒளிந்திருந்து என்ன நடக்கிறது? ஒரு கை பார்த்து விடுவோம் என்று மனதில் உறுதி பூண்டார்.

பரிதி மறையும் நேரம்.

வேட்டுவன் இலை நிறைய இளம் மான் இறைச்சியுடன் வந்து சேர்ந்தான். சிந்தி இருக்கும் மலர்களையும், வில்வ மாலையையும் எம்பிரான் திருமேனியிலிருந்து முதல் வேலையாக களைந்தான்.

வாய் நிறைய வைத்திருந்த நீரை லிங்க திருமேனியில் பீய்ச்சி அடித்தான். நாலு வில்வ இலைகளை லிங்கத்தின் தலையில் வைத்து, கறியை அன்பொழுக எம்பிரான் முன்னால் வைத்து விட்டு, சிறிது எடுத்து அவர் வாயிலும் ஊட்டி விட்டான்.

ஈஸ்வரா! இது என்ன கொடுமை? - மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த வேதியருக்கு மர்மம் விலகியது, ரத்தம் கொதித்தது.

கைலையம்பதிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

"சரி, இன்றைக்கு தரமான சம்பவம் ஒன்று நடக்க இருக்கிறது" என்று அறம் வளர்த்த நாயகியும் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

அந்த சித்தன் போக்கை, சிவன் போக்கை உமையொருபாகத்தியும் அறிந்திலள்.

லிங்க திருமேனியின் வலது கண்ணில் இருந்து ரத்தம் வடிய, சரேலென ஒரு அம்பினால் தன் கண்களை பிடுங்கி வலது பக்கம் அப்பினான். வேதியர் மயங்கி விழாத குறை.

இப்பொழுது இடது கண்ணிலிருந்தும் குருதி. அந்த சிவம் சோதிக்க முடிவு செய்து விட்டால் முடிவேது?

வேடனும் சளைக்காமல் இன்னொரு அம்பினை உருவி, தனது ஒரு காலை எடுத்து லிங்க திருமேனியின் இடது கண்ணருகே அடையாளம் வைத்துக் கொண்டு, தன் இடக்கண்ணையும் பிடுங்கி, லிங்கத்தில் அப்ப,

"போதும்! கண் அப்ப! கண் அப்ப!

ரிஷப வாகனத்தில் உமையோடு எம்பிரான் காட்சியளித்து வேடனை ஆரத் தழுவிக் கொண்டார். வேடன் கண்ணப்ப நாயனார் ஆகி விட்டார்.

வேடன், பார்த்துக் கொண்டிருந்த வேதியர் என எல்லோருக்கும் அன்று சிவ தரிசனம் கிட்டியது.

இப்பொழுது சொல்லுங்கள், வேதியரின் பக்தி சிறந்ததா? வேட்டுவன் பக்தி உயர்ந்ததா?

இரண்டுமே சரி தான்.

அவரவர் தம் தர்மப்படி சிவ வழிபாடு செய்தனர். முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் பக்தியில் ஒரு குறையும் இல்லை.

அதற்காக எல்லோரையும் மான் கறியுடன் எம்பிரான் கோவிலுக்கு கிளம்ப சொல்லவில்லை. மனம் நிறைய பக்தியுடன், சிவ சிந்தனையுடன் செல்லுங்கள்.

பதிலுக்கு வருவோம்,

பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற அந்த எண்ணமே சிறந்தது. முதல் நாள் இரவு சுத்தம் செய்து விட்டு, பக்தியோடு மறு நாள் காலையில் இறை வழிபாடு செய்தால் மறுக்கவும் செய்வானோ அந்த மருந்தீசன்?

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே!" - திருமந்திரம் 1823

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+