கழுத்தை முறிக்கும் கடன் தீர வெற்றிலை தீபம்.. இந்த 2 தீபம் ஏற்றினாலே போதும்.. பயனுள்ள தாமரை பூக்கள்
சென்னை: கடன் தொல்லையிலிருந்து விடுபடவேண்டுமா? சொந்தமாக வீடு கட்ட வேண்டுமா? வீட்டிலுள்ள இன்னல்கள் தீர வேண்டுமா? இது அனைத்துக்குமே தீர்வு கிடைக்க முருகப்பெருமானை நாடலாம். 2 விதமான பரிகாரங்கள் செய்வதன்மூலம், முருகனின் அருளும், ஆசியும் கிடைத்து, கடன் பிரச்சனைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
எவ்வளவு பணம் வந்தாலும், அது தண்ணீராய் செலவாகிவிடும்.. கடன் தொல்லையும் விரட்டிக் கொண்டேயிருந்தால், முருகனை வழிபடுவது நல்லது என்று நம்பப்படுகிறது.

கடன் தொல்லையை நீக்க முருகனை, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து, மாலை வேளைகளில் முருகன் சன்னிதியில் 12 முறை பிரதட்சணம் செய்து, நெய் தீபமேற்றி வழிபட்டு வரவேண்டும். குறிப்பாக, கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதமிருந்து தரிசித்து வந்தால் கடன்கள் தீர வழி வகைகள் பிறக்கும்.
தாமரை மாலை: திருச்செந்தூர் முருகப்பெருமானின் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். 6 வெள்ளை தாமரை பூக்களை, உங்கள் கையாலேயே ஊசி நூலால் மாலை போல் கோர்த்து கட்ட வேண்டும். இதை செவ்வாய்கிழமைகளில் முருகப் பெருமான் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வைத்து , தாமரை மாலையையும் போட்டு, உங்களுடைய வேண்டுதலை வேண்டிக் கொள்ளவேண்டும்.
இப்படி 9 செவ்வாய்கிழமைகளில் முருகனுக்கு வெண்தாமரை மாலை கட்டி போட்டு வருவதால், விரைவில் நல்ல மாற்றம் குடும்பத்தில் நடப்பதை காணலாம்.
அதேபோல, எப்போதுமே கடன் இல்லாத வாழ்க்கை அமைய வேண்டுமானால், 11 ரூபாய் காணிக்கை பரிகாரம் செய்யலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில், முருகர் படத்துக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து செவ்வரளி மாலை சூட்ட வேண்டும். ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி, தீபமேற்றி வைத்து, எளிமையான நெய்வேத்தியம் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும்.
கடன் தொல்லை: இப்போது ஒரு சிகப்பு நிற துணியில் 11 ரூபாய் காணிக்கையாக கட்டி முருகர் படத்தின் முன்பு வைத்தவிட்டு, கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு அருகிலுள்ள முருகர் கோயிலுக்கு சென்று, நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ, அவர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி 6 வாரங்கள் தொடர்ந்து செய்யும்போது, முடித்து வைத்திருக்கும் நாணயத்தை , முருகர் கோயிலிலுள்ள உண்டியலில் சேர்த்து விட வேண்டும். இதனால் எளிதில் உங்கள் கடன் அடையும்.
வெற்றிலை தீபம்: அதேபோல, வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற தீராத வேட்கை இருந்தால், செவ்வாய்க்கிழமைகளில் முருகனுகக்கு வெற்றிலையில் தீபம் ஏற்றி வரலாம்.. இதற்கு 6 முழு வெற்றிலைகளை எடுத்து கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பூஜையறையில் முருகப்பெருமானுக்கு ஒரு மனையை அமைத்து அதில் மஞ்சள் தெளித்து, கோலமிட்டு, அதில் முருகனின் படம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும் .
பிறகு, சஷ்டி திதியில், உங்கள் செலவில் ஒரு செங்கல்லை வாங்கி வந்து, வீட்டின் பூஜையறையில் மஞ்சள், குங்குமம் வைத்து, இதையும், முருகனுக்கு அருகில் வைத்துவிட வேண்டும். இப்போது 6 விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, திரியேற்றி ஒவ்வொரு விளக்கையும் ஒவ்வொரு வெற்றிலையில் வைக்க வேண்டும்.
சர்க்கரை பொங்கல்: சர்க்கரை பொங்கல், பாயாசம், வடை, சுண்டல் இப்படி ஏதாவது பிரசாதமாக வைக்கலாம். இப்போது, தீபமேற்றி, தூப, தீப ஆரத்தி காண்பித்து, உங்கள் விருப்பத்தை வேண்டிக் கொள்ளலாம். ஒவ்வொரு செவ்வாய்களில் இதை செய்துகொண்டே வருவதுடன், புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தால், விரைவில் அனைத்தும் ஈடேறும்.. அப்போது, பூஜையறையில் வைத்த செங்கலை, முதல் அஸ்திவாரமாக பயன்படுத்தலாம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications