இனி மதுரையன்ஸ கையில பிடிக்க முடியாது..வருது சித்திரை திருவிழா! மீனாட்சி, அழகர் தரிசனத்துக்கு ரெடியா?
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா பணிகள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. ஏப்ரல் 29 ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே -8 ஆம் தேதி மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், மே 9ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் பல இடங்களில் இப்போதே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரை மட்டுமல்ல தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கிய விழா என்றால் அது மதுரை சித்திரை திருவிழா தான். மதுரையை அரசாலும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை மணமுடித்து அண்ணன் கள்ளழகரை பார்க்க காத்திருக்கும் சித்திரை திருவிழாவில் மதுரையே குலுங்கி தான் போய்விடும்.
16 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் மீனாட்சி திருக்கல்யாணமும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதும் முக்கிய வைபவங்கள். திருவிழா என்றாலே மதுரை தான், மதுரை என்றாலே சித்திரைத் திருவிழா தான்.

16 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல விழாக்கள் நடைபெற்றாலும், சித்திரைத் திருவிழா தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு பெண்கள் புது தாலி கயிறு மாட்டிக்கொண்டால் மீனாட்சியைப் போலவே தாங்களும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அடைவோம் என்பது நம்பிக்கை.
அதுமட்டுமல்லாமல் கள்ளழகர் மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக மதுரைக்கு வரும்போது வைகை ஆற்றில் இறங்கும் வைபோகத்தைக் காண கண் கோடி வேண்டும். சித்திரை திருவிழாவில் 16வது நாளில் தேவேந்திர பூஜை, அதனை தொடர்ந்து மலைக்குச் சென்று அடைவதுடன் சித்திரை திருவிழா நிறைவடையும். இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடக்கிறது. அன்றைய தினம் தன்னுடைய சகோதரன் பெருமாளுக்கு உகந்த ஏகாதேசியில் திருக்கல்யாணம் நடைபெறுவது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் மகாலட்சுமி அவதரித்த உத்திரம் நட்சத்திரத்திலும் திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 15 நாட்கள் திருவிழாவான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான பணிகள் தொடங்கும் வகையில் மீனாட்சியம்மன் கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை முன்செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டுவரப்பட்டு. அங்கு மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு முகூர்த்தகால் நடப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் வளாத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29 - சித்திரை திருவிழா கொடியேற்றம், மே 06 - மீனாட்சி பட்டாபிஷேகம், மே 08 - மீனாட்சி திருக்கல்யாணம், மே 09 - மீனாட்சி திருத்தேரோட்டம், மே 10 - கள்ளழகர் புறப்பாடு, மே 11 - கள்ளழகர் எதிர்சேவை, மே 12 - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், திருவிழாவுக்காக முகூர்த்தக்கால் நடப்பட்ட நிலையில் மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கியது. .
இதேபோன்று கள்ளழகர் கோவிலை பொறுத்தமட்டில் மே 10 - கள்ளழகர் புறப்பாடு, மே 11 - கள்ளழகர் எதிர்சேவை, மே 12 - கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications