Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகா சிவராத்திரி..இன்று விடிய விடிய சிவ ஆலயங்களில் குளிர குளிர அபிஷேகம்..பக்திக்கொண்டாட்டம்

மகா சிவராத்திரியில் விரதம் இருந்து சிவாலயங்களுக்குச் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள், சிவ தரிசனம் செய்வார்கள்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிவபெருமானுக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்ளிட்ட பல சிவ ஆலயங்களில் பக்தியுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 6வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு சுவாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

MahaShivratri today 4 kala abhishekam in Shiv temples full day open all over Tamil Nadu

திருவிழாவின் 8வது நாளான இன்று சனிக்கிழமை மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. பகல் 1 மணிக்கு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

மாசி சிவராத்திரியையொட்டி பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதுபோல் நாளை மறுநாள் 19ஆம் தேதி பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகின்றது. திருவிழாவின் 9வது நாளான 19 ஆம் அன்று காலை 9.39 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

இதே போல சென்னை மயிலாப்பூரில் உள்ள 7 சிவ ஆலயங்களிலும் பள்ளிக்கரணை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருக்கச்சூர் ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயில், திருச்சி திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், சுசீந்திரம் தாணுமலயான் சுவாமி கோவில் தமிழகத்தின் முக்கியமான ஆலயங்களில், இன்று இரவு விடிய விடிய சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட சிவ ஆலயங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்னாடுடைய சிவனே போற்றி..எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற பக்தி முழக்கங்கள் ஒலித்த வண்ணம் இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+