மகா சிவராத்திரி..இன்று விடிய விடிய சிவ ஆலயங்களில் குளிர குளிர அபிஷேகம்..பக்திக்கொண்டாட்டம்
மகா சிவராத்திரியில் விரதம் இருந்து சிவாலயங்களுக்குச் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள், சிவ தரிசனம் செய்வார்கள்.
மதுரை: மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிவபெருமானுக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்ளிட்ட பல சிவ ஆலயங்களில் பக்தியுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 6வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு சுவாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவின் 8வது நாளான இன்று சனிக்கிழமை மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. பகல் 1 மணிக்கு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
மாசி சிவராத்திரியையொட்டி பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதுபோல் நாளை மறுநாள் 19ஆம் தேதி பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகின்றது. திருவிழாவின் 9வது நாளான 19 ஆம் அன்று காலை 9.39 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
இதே போல சென்னை மயிலாப்பூரில் உள்ள 7 சிவ ஆலயங்களிலும் பள்ளிக்கரணை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருக்கச்சூர் ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயில், திருச்சி திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், சுசீந்திரம் தாணுமலயான் சுவாமி கோவில் தமிழகத்தின் முக்கியமான ஆலயங்களில், இன்று இரவு விடிய விடிய சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட சிவ ஆலயங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்னாடுடைய சிவனே போற்றி..எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற பக்தி முழக்கங்கள் ஒலித்த வண்ணம் இருக்கின்றன.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications