மார்கழி அமாவாசை.. சதுரகிரியில் மலை ஏற குவிந்த பக்தர்கள்.. வனத்துறை தடையால் ஏமாற்றம்
விருதுநகர்: தொடர் மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை ஜனவரி 12ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மார்கழி மாத அமாவாசைக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலையில் வீற்றிருக்கும் சுந்தன மகாலிங்கம் ஆலயத்திற்கு பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பெளர்ணமி தினங்களில் பக்தர்கள் குவிந்து மலையேறி சென்று தரிசனம் செய்வது வழக்கம். மழை வெள்ளம் நாட்களில் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளிப்பதில்லை.

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதியன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மார்கழி மாத பிறப்பையொட்டி ஒரு நாள் மட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் மலையேறினர். இதனிடையே சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது.
திடீரென கொட்டிய கனமழையால், மலைப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டது. இதனால் மலைக்கோயிலில் உள்ள 200க்கும் மேற்பட்ட பக்தர்களை கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து அறிவுறுத்தினர். வனத்துறை அறிவிப்புக்கு முன்பாக கீழே இறங்க தொடங்கிய பக்தர்களின் பாதுகாப்புக்காக ஓடை பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பக்தர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், இன்று அமாவாசை தினத்திற்கு சதுரகிரி சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கம் ஆலயத்திற்கு பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்திற்கு பிறகு சதுரகிரியில் பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சிவராத்திரிக்கு மட்டும் தான் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், மாத சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி என 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது அந்த பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மார்கழி மாத அமாவாசைக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை ஜனவரி 12ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications