ஓணம் சத்யா.. தலைவாழை இலை போட்டு பச்சடி, கிச்சடி.. அவியல்.. பாயாசம் வகை வகையாக படையல்
சென்னை: ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் களைகட்டியுள்ளது. கொண்டாட்டங்களுக்கு இடையே ஓணம் சத்யா எனப்படும் விருந்தில் வைக்கப்படும் உணவுகளை பார்த்தாலே நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பும்.
ஓணம் என்றாலே வீடு முழுக்க அலங்காரமும், அழகாய் ஆடை அணிந்து வலம் வரும் இளசுகளும் குழந்தைகளும் தான் நினைவுக்கு வருவார்கள். அதை விட முக்கியமாக 'ஓணம் சத்ய' எனப்படும் திருவோண திருநாள் விருந்துதான். ஓணம் பண்டிகைக்கு வகை வகையாக சமைத்து தலைவாழை இலை போட்டு ருசியாக சாப்பிடுவதோடு உறவினர்களுக்கும் விருந்து வைப்பார்கள்.

ஓணம் என்பது மலையாள மொழி பேசும் மக்களின் அறுவடைத்திருநாள். அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி, சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பாதாள லோகத்தில் இருந்து தங்களை காண வரும் மன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
வீடுகள் தோறும் அலங்கரித்து அத்தப்பூ கோலமிட்டு புத்தாடைகள் அணிந்து இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். பலவித விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர். பெண்கள் வீடுகளில் விளக்கேற்றியும் நடனமாடியும் ஊஞ்சல்கள் ஆடியும் மகிழ்ச்சியுடன் திருவோணம் திருநாளை கொண்டாடுகின்றனர். புலிகளை போல வேடமிட்டும் பலரும் ஊர்வலம் வருவார்கள். ஆறுகளில் படகுப்போட்டியும் நடத்தப்படும்.
அறுவடை திருநாளில் பத்தாவது தினத்தில் திருவோணம் தினத்தில் படையலிடப்படும் விருந்துக்கு ஓணம் சத்யா என்று பெயர். தலைவாழை இலையில் சுமார் 26 பொருட்களுடன் பரிமாறப்படும் சைவ விருந்து உணவு. அரிசி, பருப்பு, காய்கறிகள், இனிப்புகள், பாயாசம், பப்படம் என பலவகை உணவுகள் இந்த விருந்தில் பரிமாறப்படும்.
சுவையான விருந்து: புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், பால் பாயசம், சிவப்பு அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, நேந்திரம் சிப்ஸ், ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் சேர்த்து செய்யப்படுவது சிறப்பு. பலவகை உணவுகள் சமைத்து சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆவதற்காகத்தான் உணவில் இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி போன்றவை சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மக்களின் பாரம்பரியம்: ஓணம் பண்டிகை கேரள மக்களின் பாரம்பரிய அறுவடைத்திருவிழா. இந்த நாளில் பல வீடுகளில் விருந்துகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில், குருவாயூரப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் வரும் பக்தர்களுக்கு ஓணம் சத்யா விருந்து பரிமாறப்படுகிறது. பல பிரபல ஹோட்டல்களிலும் ஓணம் சத்யா விருந்துகள் களைகட்டியுள்ளன. மலையான மக்களின் ஓணம் சத்யா விருந்தினை சுவைக்க விரும்புபவர்கள் இன்றைய தினம் ஹோட்டல்களில் சுவைத்து மகிழலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications