சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை.. நாளை நடை திறப்பு.. என்னென்ன ஏற்பாடுகள்
சபரிமலை: கார்த்திகை மாதம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்க உள்ளனர். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27 ஆம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
சபரிமலை: கேரள மாநிலம் சபரிமலையில் அருள்பாலிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனை காண்பது பலருக்கும் ஆனந்தம். சாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை நாளை மறுநாள் சனிக்கிழமை 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

ஐயப்பன் கோவில் நடை திறப்பு: மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓராண்டு காலம் மேல் சாந்தியாக இருந்த ஜெயராமன் நம்பூதிரி ஐயப்பன் கோவில் நடையை திறந்து வைக்கிறார். ஐயப்பன் சன்னதியில் தீபம் ஏற்றிய பின் 18 படிகள் வழியாக கீழே இறங்கி சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்ப்பார்.
புதிய மேல் சாந்தி: 18ஆம் படிக்கு கீழே இருமுடி கட்டுடன் நிற்கும் புதிய மேல் சாந்திகளான சபரிமலை பி.என். மகேஷ், மாளிகைபுறம் மேல்சாந்தி வி.ஜி.முரளி ஆகியோரை கைப்பிடித்து கோவிலுக்கு முன் அழைத்து வருவார். இரவு 7 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சபரிமலை மேல் சாந்தி பி.என். மகேஷுக்கு அபிஷேகம் நடத்துவார். ஐயப்பன் மூல மந்திரத்தை காதில் ஓதி சன்னதிக்குள் அழைத்து செல்வார். இதுபோல மாளிகைபுறம் மேல் சாந்திக்கும் அபிஷேகம் நடத்தி மூலஸ்தானத்திற்குள் அழைத்து செல்லப்படுவார்.
நெய்யபிஷேகம்: நவம்பர் 17ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி பி.என்.மகேஷ் நடை திறந்து தீபம் ஏற்றியதும், இந்தாண்டுக்கான மண்டல பூஜைக்காலம் தொடங்குகிறது.
ஐயப்பனுக்கு தங்க அங்கி: நவம்பர் 17 முதல் தினசரியும் அதிகாலை 3.15 மணி முதல் மதியம் 12 மணி வரை நெய்யபிஷேகம் நடக்கும். இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். 420 சவரன் எடை கொண்ட தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
டிசம்பர் 27 மண்டல பூஜை: தங்க அங்கி அணிந்து தீப ஒளியும் ஜொலிக்கும் ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இன்று மதியம் 12.30 மணியில் இருந்து ஒரு மணிக்குள் ஐயப்பனுக்கு மண்டல பூஜைகள் நடைபெறும். மாலை 5 மணிக்கு புஷ்ப அபிஷேகம் நடைபெறும். டிசம்பர் 27ஆம் தேதி இரவு அத்தாழ பூஜை நடைபெற்ற பின்னர் கோயில் நடை அடைக்கப்படும்.
மகரவிளக்கு பூஜை: பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். 31ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 20ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.
முன்பதிவு அவசியம்: ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். பக்தர்கள் https://sabarimalaonline.org எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு: இந்தாண்டும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்த வேண்டும். இங்கிருந்து கேரள அரசு பேருந்தில் பம்பை வரை செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் சுமார் 7, 500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications