Sivanmalai: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் கடல் நீர்! சுனாமி வருமா? பக்தர்கள் அச்சம்!
திருப்பூர்: காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஆண்டவன் உத்தரவு கண்ணாடிப் பேழையில் இன்று கடல்நீர் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதை வைப்பதால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். கடல் நீர் வைத்து வழிபட சொல்லியிருப்பதால் ஒருவேளை இயற்கைச் சீற்றம் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில் விநோத வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த மலைக் கோயிலில் எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, இக்கோயிலில் 'ஆண்டவன் உத்தரவு' என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
பக்தர்களின் கனவில் முருகன் வந்து குறிப்பிட்ட பொருளை வைத்து வழிபட வேண்டும் என சொல்வார். அதை கேட்டுவிட்டு சிவன்மலைக்கு வந்து பக்தர்கள் பூசாரியிடம் சொல்வார்கள். அப்போது பூசாரி அந்த பக்தர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்பதை பூ போட்டு பார்ப்பார்.
ஒரு வேளை உண்மையாக இருந்தால் ஏற்கெனவே வழிபட்டு வரும் பொருளை கண்ணாடி பேழையில் இருந்து எடுத்துவிட்டு பக்தர்கள் சொல்லும் புதிய பொருளை வைப்பார்கள். இதனால் தான், இது 'ஆண்டவன் உத்தரவு' என்றும் அழைக்கப்படுகிறது'.
இந்நிலையில், கோவை மாவட்டம் மணியகாரம்பாளையம் இடிகரையைச் சேர்ந்த பெண் பக்தர் பவானி என்பவரின் கனவில் வந்ததாக கடல்நீர் வைத்துப் பூஜை செய்யப்பட்டு, மேற்கண்ட பொருள் கண்ணாடிப் பேழைக்குள் இன்று வைக்கப்பட்டது. இவ்வாறு காட்சிக்கு வைக்கப்படும் பொருள் தொடர்பாக ஏதேனும் ஒரு சம்பவம் நிகழும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
முன்னதாக கண்ணாடிப் பேழைக்குள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் பிரம்பு மற்றும் சூடம் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 7 மாதங்களுக்குக் பிறகு பக்தரின் கனவில் வந்த கடல்நீர் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடல் நீரை வைத்து வழிபடுவதால் சுனாமி ஏதேனும் வருமா, இல்லை கடலில் இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் நடக்குமா, தற்போது வடகிழக்கு பருவமழைக் காலம் என்பதால் கடலில் ஏதேனும் ஆக்ரோஷ புயல் உருவாகுமா இல்லை கடல் சார்ந்த தொழில் வளர்ச்சி அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த பூஜைப் பொருள் மற்றொரு பக்தரின் கனவில் வரும் வரை, கண்ணாடிப் பேழைக்குள் இந்தப் பொருளை பக்தர்கள் பார்த்து வழிபாடுவார்கள்.
கார்கில் போர், சுனாமி, சசிகலா சிறை சென்ற விவகாரம் என நிறைய விஷயங்களை சிவன்மலை ஆண்டவர் முன்கூட்டியே மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார் என்பதால் இங்கு வைக்கப்படும் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அத்தனை எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அது போல் பருத்தி, இளநீர், மஞ்சள் உள்ளிட்டவை வைத்து பூஜை செய்ய சொன்ன போது படுபாதாளத்தில் இருந்த அவற்றின் விலையில் உயர்வு ஏற்பட்டு விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கப்பட்டது. அது போல் கொரோனா காலகட்டத்தில் மஞ்சளை வைத்து பூஜை செய்ய சொன்ன போது நாம் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க மஞ்சள் தூளை நிறைய பயன்படுத்தினோம். மஞ்சள் ஒரு கிருமிநாசினி. இப்படியாக பல்வேறு விஷயங்களை இந்த உத்தரவு பெட்டி உணர்த்தியுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications