சென்னை: வீட்டிலுள்ள திருஷ்டிகளை கழிக்க எலுமிச்சையை பயன்படுத்துவது ஏன் தெரியுமா? வறுமை, கஷ்டம், ஒழிய பீரோவுக்கு அடியில் எலுமிச்சை வைக்க என்ன காரணம்? எலுமிச்சம் பழத்தின் மகத்துவம் என்ன தெரியுமா? பரிகாரத்துக்கு எப்படி பயன்படுத்தலாம்?
எலுமிச்சம்பழங்களை பொறுத்தவரை ஆன்மீகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கனியாகும்.. இந்த பழம் புதன், சந்திரனுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. எலுமிச்சம் பழத்திலுள்ள புளிப்பு, புதன் கிரகத்தை சரிசெய்யக்கூடியது.. அதேபோல, பழத்திலிருக்கும் சாறு சந்திரனின் அடையாளமாக அறியப்படுகிறது.
தேவகனி: எலுமிச்சம் பழத்திற்கு "தேவ கனி" என்று சொல்வது உண்டு.. தெய்வங்களுக்கு உகந்த தெய்வ கனி இதுவாகும்.. வேத சாஸ்திரங்களை பொறுத்தவரை, எலுமிச்சம் பழத்திற்கும் உயிர் இருப்பதாகவே கருதப்படுகிறது. மந்திரங்களை கிரகிக்கும் சக்தி எலுமிச்சைக்கு இருக்கிறது.. அத்துடன், நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் பெருக்கும் தன்மையும் உண்டு என்பால்தான். இந்த ராஜகனி தெய்வ வழிபாட்டில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது.
எப்போதுமே எலுமிச்சையை, பிறரிடம் கடனாக வாங்கக்கூடாது, தீய எண்ணங்கள் கொண்டவர்களிடமிருந்தும் எலுமிச்சம்பழம் வாங்கக்கூடாது.. பரிகாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட பழத்தை தொடக்கூடாது.
திருஷ்டி: எப்போதுமே எலுமிச்சையை, பிறரிடம் கடனாக வாங்கக்கூடாது, தீய எண்ணங்கள் கொண்டவர்களிடமிருந்தும் எலுமிச்சம்பழம் வாங்கக்கூடாது.. பரிகாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட பழத்தை தொடக்கூடாது. எதிர்மறை தன்மையை குறைக்கும் சக்தி, எலுமிச்சம் பழங்களுக்கு உள்ளதால்தான், திருஷ்டியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
திருஷ்டி கழிப்பதற்காக, கோயிலில் தரப்பட்ட பழத்தை பயன்படுத்தக்கூடாது.. பிறருக்கு கெடுதலை தரக்கூடிய செய்வினை செய்வதற்காகவும் எலுமிச்சையை உபயோகிக்கிறார்கள் என்றாலும், தீய சக்திகள், எதிர்மறை சக்திகளை நம்மீது விழாமல் தனக்குள் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் இந்த பழத்துக்கு உண்டு.
எலுமிச்சை மாலை: துர்கை, பத்ரகாளி போன்ற உக்ரமான தெய்வங்களுக்கு எலுமிச்சையை மாலையாக அணிவித்தால், நீண்ட நாள் தடைபட்ட காரியங்கள் கைகூடுமாம்.. அதேபோல, எந்த ஒரு நல்ல காரியத்திற்கு செல்வதற்கு முன்பும், 3 எலுமிச்சம் பழங்களை அம்மன் கோவில் வாசலின் முன்புறமுள்ள திரிசூலத்தில் சொருகி விட்டு சென்றால் நல்லது...
ஒரு தட்டில் கல் உப்பு போட்டு, அதன்மீது எலுமிச்சையை வெட்டி, கட்டிலுக்கு அடியில் வைத்துவிடலாம். விடிந்ததும், அந்த எலுமிச்சையை கைகளால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து வீசிவிட வேண்டும். இது வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழைவதை தடுக்கும். எலுமிச்சம்பழத்தை 2 துண்டுகளாக வெட்டி குங்குமமும் மஞ்சளும் தடவி வீட்டு வாசலின் முன்புறத்தின், இரண்டு முனையிலும் வைக்கலாம்.
பீரோ: அதுபோலவே, குடும்பத்தில் ஏற்படும் வீண் விரைய செலவுகளை தடுக்கவும், கண் திருஷ்டியை போக்கவும், வீட்டில் தட்டுப்பாடின்றி பணவரவு ஏற்படவும், ஒரு தட்டில் கல் உப்பு பரப்பி, அதில் எலுமிச்சம் பழம் வைத்து, பீரோவுக்கு அடியில் வைத்துவிடலாம. பீரோவை தாங்கும் 2 கால்களுக்கு நடுவில், யாருக்கும் தெரியாமல் உட்புறமாக வைத்துவிட்டால் போதும், 7 நாட்கள் கழித்து, இந்த தட்டிலுள்ள உப்பு, பழத்தை மாற்றி கொள்ளலாம். இதனால், பீரோவிலுள்ள பணம் செலவாகாமல், பெருகும் என்பது நம்பிக்கையாகும்.