Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தைப்பூசம்.. தம்பதியர் ஒற்றுமை தரும் தமிழ் கடவுள் முருகன்.. தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த தைப்பூசம் நாளில் விரதம் இருந்தால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு நாளும் உனை மறவாத பிரியாத வரம் வேண்டும் என்று இறைவனிடம் கேட்டு பெறலாம். தைப்பூசத்தின் சிறப்புகள், விரதம் இருப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தைப்பூசம்: தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரம் தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த நாள். தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.

Thaipusam Viratham benefits: Husband and wife family unity viratham on 25th January

தமிழ் கடவுள் முருகன்: தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

தைப்பூசம் விரதம்: தை மாதம் 11ஆம் தேதி ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நல்ல நாளில் காலை முதல் மாலை வரை முருகனை நினைத்து விரதம் இருந்து ஆலயத்திற்கு சென்று முருகனை தரிசித்து, வழிபாடு செய்வது நல்லது. இதில் காலை மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வணங்குவது நல்லது.

வரம் தரும் முருகன்: தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம். தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு நாளும் உனை மறவாத பிரியாத வரம் வேண்டும் என்று கேட்டு பெறலாம்.

காவிரியின் தவம்: கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரியானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

வேல் வழிபாடு: முருகனை வழிபடும் சமயத்தில் வேல் வழிபாடு செய்வது நல்லது. முடிந்தால் காலை மாலை என இருவேளையும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடலாம். வியாழக்கிழமை தைப்பூசம் வருவதால் குரு பகவானையும், சிவபெருமானையும் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம்.

நல்லூர் கந்தசாமி: இலங்கையில் நல்லூர் என்னும் திருத் தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடுகிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். இங்கு தைப்பூச விழாவை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

தொட்டது துலங்கும் விரதம்: தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு. தைப்பூசம் நாளில் உலகத்தில் பல நற்காரியங்கள் நிகழ்ந்துள்ளதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

கணவன் மனைவி ஒற்றுமை: தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம். இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்: தைப்பூசம் அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டார். சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார்.

சிதம்பரம் நடராஜர்: தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், ஆதிசேஷ அம்சமான பதஞ்சலி முனிவர் வியாக்ர பாதர் இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனத்தை கண்டு களித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+