திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா.. தருமபுரம் ஆதினத்திடம் ஆலோசனை.. புதுச்சேரி அரசு ஹைகோர்ட்டில் தகவல்
சென்னை: தருமபுரம் ஆதினத்தை கலந்தாலோசித்தே திருநள்ளாறு கோயில் சனி பெயர்ச்சி திருவிழா நடத்தப்படுகிறது என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. தருமபுரம் ஆதீனம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயியில் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சனி பகவான் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக இருக்கிறார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் தருமபுரம் ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தருமபுரம் ஆதினம் கட்டுப்பாட்டில் கோயில் உள்ள நிலையில் சனிப்பெயர்ச்சி விழா நடத்த குழு அமைத்ததாக புகார் எழுந்துள்ளது. கோவிலின் அனைத்து விழாக்களும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் தான் நடத்தப்படும் நிலையில், அறங்காவலர் குழுவோ, சிறப்பு அதிகாரியோ இல்லாவிட்டால் விழாக்கள் தொடர்பாக ஆதினத்தை கலந்தாலோசிக்க வேண்டுமென உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது.
அதன்படி, கோவிலின் செயல் அலுவலரையும், சிறப்பு அதிகாரியாக மாவட்ட ஆட்சியரையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 20ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், சனிப்பெயர்ச்சி திருவிழாவை நடத்துவதற்கு சிறப்புக் குழுவை அமைத்து அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவிலில் விழாக்கள் நடத்துவது தொடர்பாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டளை தம்பிரானுடன் கலந்து பேசிய பின்னர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 25ம் தேதி புதுச்சேரி அரசிடம் தருமபுரம் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், விழா பணிகள் தொடர்பாக தன்னை கலந்தாலோசிக்கவில்லை என்றும், விழா தொடர்பான டெண்டர் அறிவிப்பதிலும் கலந்தாலோசிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.எனவே தனது மனுவை பரிசீலிக்கவும், சனி பெயர்ச்சி விழா தொடர்பாக தன்னிடம் கலந்து பேச உத்தரவிடவும் வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, தருமபுரம் ஆதினகர்த்தர் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, தருமபுரம் ஆதினத்தை கலந்தாலோசித்தே திருநள்ளாறு கோயில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்தப்படுகிறது என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. தருமபுரம் ஆதீனம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. புதுச்சேரி அரசின் அறிக்கையை ஏற்று தருமபுரம் ஆதினம் தரப்பு தாக்கல் செய்த வழக்கை ஹைகோர்ட் முடித்து வைத்தது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications