சந்திரகிரகணம் 2025: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை திறப்பு! பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம்
திருப்பதி: சந்திரகிரகணத்தையொட்டி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு அடைக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை, இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக கோயில் சுத்தம் செய்யப்பட்டு தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்பட்டன.
செப்டம்பர் 7, 2025 அன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சுமார் 12 மணி நேரம் மூடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது.
சந்திரகிரகணத்தையொட்டி நேற்று பவுர்ணமி பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து நேற்றைய தினம் பிற்பகல் 3:30 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. முழு சந்திரகிரகணம் இரவு 9.24 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 1.26 மணிக்கு முடிந்தது. இதையடுத்து கோயிலை ஊழியர்கள் தண்ணீர் விட்டு சுத்தம் செய்தனர்.
மேலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் ஆகமவிதிப்படி, தோஷ நிவர்த்தி பூஜைகளை செய்தனர். இதையடுத்து அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

சந்திர கிரகணம் இரவு 9:50 மணிக்கு தொடங்கி, அதிகாலை 1:31 மணிக்கு நிறைவடைந்தது. ஜோதிட சாஸ்திரப்படி, கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகவே கோயில் நடையை மூடுவது வழக்கம்.
இந்த காலகட்டத்தில், அர்ச்சனைகள் மற்றும் அன்னதானம் போன்ற சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள பிற கோவில்களான கோவிந்தராஜ சாமி கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உள்ளிட்ட மற்ற கோயில்களின் நடை அடைப்பு நேரங்களும் அறிவிக்கப்பட்டன. அத்துடன் திருப்பதியில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்மணி கருட சேவையும் ரத்து செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications