சமயபுரம் மாரி.. சிறுவாச்சூர் மதுரகாளி.. உறையூர் வெக்காளி.. ஆடியில் அம்மன் தரிசனம்.. புக் பண்ணுங்க
சென்னை: ஆடி மாதத்தையொட்டி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலாத்துறையும், இந்து சமய அறநிலையத்ததுறையும் இணைந்து ஆன்மிகச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம் ஆன்மீக அலைகள் வீசும் மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோவில்கள் திருவிழா கோலம் பூண்டிருக்கும். பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சிறப்பு வாய்ந்த அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுகிறது.

ஜூலை 17 முதல் ஆடி மாத சுற்றுலா தொடங்கியுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் இந்துசமய அறநிலையத்துறை இணைந்து நடத்தும் ஆடி மாத ஆன்மிகச் சுற்றுலாவின் முதல் பயணம் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இச்சுற்றுலாவில் உறையூர் வெக்காளியம்மன் கோயில், கமலவள்ளி நாச்சியார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மாளிக்குடி உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோயில், பெரம்பலூர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், பொன்மலை பொன்னேஸ்வரியம்மன் கோயில், தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில், ஆகிய அம்மன் கோயில்களுக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் முதல் பயணமாக இன்று காலை ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வேன், 8 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இப்பயணத்தை மேற்கொண்டவர்களுக்கு சுற்றுலாத்துறையின் மூலம் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு பயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்மன் கோயில்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அடுத்தப் பயணம் வரும் 28ம் தேதி ஆடி வெள்ளியன்று செயல்படவுள்ளது. இதற்கான பயணர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டனர்.
திருச்சி மக்களே உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு, ஆடி மாதத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மனை ஒரே நாளில் தரிசித்து மகிழுங்கள். செவ்வாய், ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கடுத்தப் பயணம் செல்ல விரும்புவோர் ஆடி மாத ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் 0431- 2414346 மற்றும் 9176995874 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து ஆன்மிக பக்தர்களும் இச்சுற்றுலாவில் பங்கேற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications