துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றுவது ஏன்?
சென்னை: துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றுவது ஏன்?
எலுமிச்சை பழம் உடல்நலனுக்கு உகந்த பழம். இது குளிர்ச்சியை தரும். மேலும் இது ஆன்மீக ரீதியாகவும் நல்ல பலன்களை கொடுக்கிறது. கோயில்களில் எலுமிச்சை பழம் கொடுக்கிறார்கள். அது போல் கண் திருஷ்டிக்காகவும் இந்த எலுமிச்சைகள் பயன்படுகின்றன.

அம்மன் கோயில் திருவிழாக்களில் சாமியாடிகளுக்கு அருள் வருவதற்காக எலுமிச்சை பழத்தை பிழிவார்கள். பொதுவாக எலுமிச்சை பழத்தை தேவகனி என்றும் தெய்வ கனி என்றும் அழைப்பார்கள்.
எலுமிச்சை பழம் நல்ல சக்தியை பெற்று தீய சக்தியை ஏவிவிடவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோயில்களில் இந்த எலுமிச்சை பழங்கள் நல்ல சக்தியை கொடுக்கின்றன. இதே வீடுகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எலுமிச்சை கெட்ட சக்தியை ஒழித்துவிட்டு நேர்மறை சக்தியை அதிகரிக்கிறது.
அது போல் இந்த எலுமிச்சைக்கு வேத மந்திரங்களை உள்ளே கிரகித்துக் கொள்ளும் சக்தியும் உண்டு. இந்த எலுமிச்சை பழங்கள் நல்ல காரியங்கள் கை கூட உதவுகிறது. தெய்வ வழிபாட்டில் இந்த எலுமிச்சையை கொண்டு மாலையாக சாத்தும் பழக்கமும் உண்டு. துர்க்கை அம்மன், பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களுக்கு இந்த எலுமிச்சை மாலை சாத்துவார்கள்.
உக்கிர தெய்வங்களான துர்க்கை, பத்ரகாளி ஆகிய தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை சாத்துவதால் நீண்ட நாள் தடைப்பட்ட காரியங்கள் கைகூடும் என்று சொல்வதுண்டு. அது போல் துர்க்கைக்கு ராகு காலத்தில் எலுமிச்சையால் விளக்கு ஏற்றினாலும் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
துக்க நிவாரணி- துன்பங்களை தீர்ப்பவள் துர்க்கை என கூறப்படுகிறது. நவக்கிரகங்களல் முக்கியமானவரான ராகுவின் அதிபதியும் துர்க்கை அம்மன்தான். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால், ஜோதிடத்தில் இருக்கும் பிரச்சினை விலகும் என்பது ஐதீகம். மேலும் துன்பத்திலிருந்தும் விடுபடலாம்.
எலுமிச்சையை பாதியாக அறுத்து! ஒரு மூடியில் குங்குமம்! மறுமூடியில் மஞ்சள் தடவி வைப்பது ஏன்?
ராகு காலத்தில் விளக்கு என்றால் அதற்கும் சில கிழமைகள் உள்ளன. அந்த கிழமைகளில் வரும் ராகுல் காலத்தில்தான் எலுமிச்சை விளக்கு ஏற்ற வேண்டும். செவ்வாய்க்கிழமை மாலை 3 டூ 3.30 மணி வரையும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் ராகு காலத்தில் விளக்கேற்றலாம்.
இந்த கிழமைகளில் விளக்கு ஏற்றும் போது துர்க்கையின் அருள் நமக்கு நேரடியாக கிட்டும் என்கிறார்கள். எலுமிச்சையை இரண்டாக அறுத்து அதன் சாற்றை மரத்தில் விட்டுவிடுவார்கள். பின்னர் அதை அப்படியே திருப்பி, அதாவது மஞ்சள் நிறத்தை வெளிப்புறமாக திருப்பி அதன் ஓரங்களில் மஞ்சள், குங்குமம் இட்டு விளக்கேற்றினால் நமது வேண்டுதல் நிச்சயம் பலிக்கும் என்பது ஜோதிட ரீதியில் தெரிவிக்கப்படுகிறது. திருமணத் தடை, குழந்தை பாக்கியத்திற்கு இந்த எலுமிச்சை விளக்கு கைக் கொடுக்கும் என்கிறார்கள்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications