Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறந்தும் கூட பெண்கள் வெள்ளிக்கிழமை இதை செய்யாதீங்க.. வீட்டில் மகிழ்ச்சி, பணம் பெருக உதவும் டிப்ஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில காரியங்களை வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் செய்யவே கூடாது என்பார்கள்.. அதேபோல, சில காரியங்களை வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் செய்வதால், குடும்பத்தில் நன்மைகள் பெருகும்.. அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். அந்தவகையில், பெண்கள் வெள்ளி கிழமைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். பெரும்பாலும் குடும்பத்தில் பெண்கள் அறியாமல் செய்யும் சில தவறுகள்தான் கடன் பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாகவிடுகின்றன. எனவே, கடன் பிரச்சினை தீரவும், செல்வ வளம் அதிகரிக்கவும், ஆரோக்கியம் கூடவும் பெண்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது?

பூஜை பொருட்கள்: பெண்கள் காலையில் கோலமிடும்போது, தெற்கு பார்த்து நின்றப்படி கோலம் போடக்கூடாது... வீட்டில் ஒட்டடை அடிப்பது, அடுப்புகளை கழுவது, வீட்டை சுத்தம் செய்வது, பூஜை பொருட்களை சுத்தம் செய்வது போன்றவற்றை வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாது. வெள்ளிக்கிழமைகளில் அழுக்கு துணிகளை துவைக்கக்கூடாது.. வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் கயிறு மாற்றக்கூடாது..

spirituality friday women

அமாவாசை அல்லது வீட்டில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது போன்ற நாட்களில் கோலம் போடக்கூடாது.. அமாவாசையன்று சமைக்கக்கூடாத காய்கறிகளை அதாவது, முட்டைக்கோஸ், நூக்கல், முள்ளங்கி, பீன்ஸ், கத்தரிக்காய், காலிஃபளவர், ப்ரெக்கோலி, பட்டாணி போன்ற காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது.

3 மெட்டிகள்: எப்போதுமே பெண்கள் 3 மெட்டிகள் அணியக்கூடாது. விசேஷ நாட்களில் வீட்டில் கசப்பான உணவுகளை சமைக்க கூடாது.. மாதவிலக்கு நாட்களில் தலையில் பூ வைப்பதை தவிர்க்க வேண்டும்.. கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் சொல்வார்கள்.

எனவே, எப்போதுமே வெள்ளிக்கிழமையன்று காலையில், முன் வாசலில் தண்ணீர் தெளித்து அரிசி மாவினால் கோலமிட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு தண்ணீரில் மஞ்சள் கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதனால், கெட்ட சக்திகளின் வீட்டிற்குள் இருந்தாலும், அது விரட்டியடிக்கப்பட்டுவிடும்.

பின்னர் பூஜை அறையில் உள்ள கடவுள் படங்களை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து பூ வைக்க வேண்டும். அத்துடன், வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும்.

குபேரன் வழிபாடு: கல் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி சமையலறையில் நிரப்பி வைக்கவேண்டும்.. இதனால், குடும்பத்தில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். கடன் சுமையும் வெகுவாக குறையும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கும், குபேரனுக்கு உரிய மிக உன்னதமான நாள் என்பால், அன்றைய தினம் விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. அதேபோல, வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி துர்கை அம்மனை எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை இருந்தாலும் நீங்கிவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+