ஏடாகூட ஏர்டெல்.. அவசர ஆத்திரத்துக்கு கூட போன் பண்ண முடியல! புலம்பும் வாடிக்கையாளர்கள்! ஜியோவுமா?
சென்னை: தமிழகத்தின், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக (Airtel Down) பயனர்கள் புகார் கூறி உள்ளனர். கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து வாடிக்கையாளர்களை அழைக்க முடியவில்லை என்றும் இன்டர்நெட் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக டவுன்டிடெக்டர் இணையதளத்தில் 8000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர். இதேபோல ஜியோ நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை என நூற்றுக்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருக்கின்றனர்.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவையை வழங்கி வந்த ஏர்செல் மூடப்பட்ட பிறகு ஏர்டெல், ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் தொலை தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன.
குறிப்பாக ஏர்டெல், ஜியோ ஆகியவை தற்போது தொலைதொடர்பு சேவையில் முன்னணியில் உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மாலை 6:30 மணியிலிருந்து ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களையும் பிற வாடிக்கையாளர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என புகார் கூறுகின்றனர் பயனர்கள். மேலும் இணையதள சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவசர தேவைக்கு கூட அழைக்க முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் ஏப்ரல் சேவை முடக்கப்பட்டதா? சர்வர் பிரச்சினையா என்ன பிரச்சனை என பலரும் ஏர்டெல் நிறுவனத்தை டேக் செய்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகார் கூறி வருகின்றனர்.
இதேபோல சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் புகார் எழுந்து இருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் 3 சதவீதம் சரிந்ததாக இன்று தான் அந்த நிறுவனம் கூறியிருந்தது. இதற்கிடையே ஏர்டெல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சேவை குறைபாடு குறித்து புகார் அளிக்கும் டவுன் டிடெக்டரில் 7 மணியிலிருந்து ஏர்டெல் சேவை தொடர்பாக புகார்கள் தொடர்ந்து பதிவாகி வருகிறது. 9 மணி நிலவரப்படி 8314 பேர் சேவை குறைபாடு இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கின்றனர். சிக்னல் இல்லை என 63 சதவீதம் பேரும், மொபைல் இன்டர்நெட் வேலை செய்யவில்லை என 13 சதவீதம் பேரும், மொபைல் பிரச்சனை என 24 சதவீதம் பேரும் புகார் தெரிவித்து இருக்கின்றனர். இதே போல குஜராத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
இதே போல ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ தொலைத்தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பலமுறை அந்த நிறுவனத்தின் தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக டவுன் டிடெக்டரில் புகார்கள் பதிவாகியுள்ளது. குறிப்பாக மாலை 7 மணியில் இருந்து தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் சேவை குறைபாடு இருப்பதாக புகார் கூறியிருக்கின்றனர். மொபைல் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக 52 சதவீதம் பேரும், jio ஃபைபர் வேலை செய்யவில்லை என 37 சதவீதம் பேரும், சிக்னலே கிடைக்கவில்லை என 11 சதவீதம் பேரும் புகார் கூறியிருக்கின்றனர்.
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய்












Click it and Unblock the Notifications