ஏடாகூட ஏர்டெல்.. அவசர ஆத்திரத்துக்கு கூட போன் பண்ண முடியல! புலம்பும் வாடிக்கையாளர்கள்! ஜியோவுமா?
சென்னை: தமிழகத்தின், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக (Airtel Down) பயனர்கள் புகார் கூறி உள்ளனர். கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து வாடிக்கையாளர்களை அழைக்க முடியவில்லை என்றும் இன்டர்நெட் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக டவுன்டிடெக்டர் இணையதளத்தில் 8000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர். இதேபோல ஜியோ நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை என நூற்றுக்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருக்கின்றனர்.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவையை வழங்கி வந்த ஏர்செல் மூடப்பட்ட பிறகு ஏர்டெல், ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் தொலை தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன.
குறிப்பாக ஏர்டெல், ஜியோ ஆகியவை தற்போது தொலைதொடர்பு சேவையில் முன்னணியில் உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மாலை 6:30 மணியிலிருந்து ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களையும் பிற வாடிக்கையாளர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என புகார் கூறுகின்றனர் பயனர்கள். மேலும் இணையதள சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவசர தேவைக்கு கூட அழைக்க முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் ஏப்ரல் சேவை முடக்கப்பட்டதா? சர்வர் பிரச்சினையா என்ன பிரச்சனை என பலரும் ஏர்டெல் நிறுவனத்தை டேக் செய்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகார் கூறி வருகின்றனர்.
இதேபோல சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் புகார் எழுந்து இருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் 3 சதவீதம் சரிந்ததாக இன்று தான் அந்த நிறுவனம் கூறியிருந்தது. இதற்கிடையே ஏர்டெல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சேவை குறைபாடு குறித்து புகார் அளிக்கும் டவுன் டிடெக்டரில் 7 மணியிலிருந்து ஏர்டெல் சேவை தொடர்பாக புகார்கள் தொடர்ந்து பதிவாகி வருகிறது. 9 மணி நிலவரப்படி 8314 பேர் சேவை குறைபாடு இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கின்றனர். சிக்னல் இல்லை என 63 சதவீதம் பேரும், மொபைல் இன்டர்நெட் வேலை செய்யவில்லை என 13 சதவீதம் பேரும், மொபைல் பிரச்சனை என 24 சதவீதம் பேரும் புகார் தெரிவித்து இருக்கின்றனர். இதே போல குஜராத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
இதே போல ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ தொலைத்தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பலமுறை அந்த நிறுவனத்தின் தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக டவுன் டிடெக்டரில் புகார்கள் பதிவாகியுள்ளது. குறிப்பாக மாலை 7 மணியில் இருந்து தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் சேவை குறைபாடு இருப்பதாக புகார் கூறியிருக்கின்றனர். மொபைல் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக 52 சதவீதம் பேரும், jio ஃபைபர் வேலை செய்யவில்லை என 37 சதவீதம் பேரும், சிக்னலே கிடைக்கவில்லை என 11 சதவீதம் பேரும் புகார் கூறியிருக்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications