5 ஜி யூஸ் பண்ணுறீங்களா.. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் எடுத்த முடிவு.. வாடிக்கையாளர்கள் ஷாக்!
சென்னை: 5ஜி சேவைகளுக்கு 5 - 10% கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொலை தொடர்பு சேவையில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்க கவர்ச்சிகரமான அறிவிப்புகளை ஆரம்பத்தில் வெளியிட்டு வந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகம் ஆனது. வாடிக்கையாளர்களே எதிபார்க்காத அளவுக்கு ஜியோ சலுகளை அள்ளி வீசியது.

அதன்பிறகு கணிசமான வாடிக்கையாளர்களை பெற்ற பிறகு சலுகைகளை குறைத்து கட்டணத்தை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது 5 ஜி இணைய சேவையை செல்போன் நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி கட்டணத்திலேயே 5 ஜி சேவையையும் வழங்கி வருகின்றன. அதுபோக அன்லிமெட்டெடு 5 ஜி சேவையும் தற்போது வழங்கப்படுகிறது.
5 ஜி சேவை கட்டணம்: 4 ஜி சேவையுடன் ஒப்பிடும் போது 5 ஜி நெட்வொர்க்கின் வேகம் பலமடங்கு என்பதால் வாடிக்கையாளர்களும் 5 ஜி சேவையை விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் தற்போது 5 ஜி சேவை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் ஏண்ணிக்கை 125 மில்லியனாக உள்ளது. நடப்பு ஆண்டு இறுதிக்குள் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் 5 ஜி சேவையை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் தற்போது வருவாயை பெருக்கும் விதமாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5 ஜி சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 ஜி அன்லிமிட்டடு சேவையையும் திரும்ப பெறுவதோடு 4 ஜி கட்டணத்தை விட கூடுதலாக 5 - 10 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிகரிக்க வாய்ப்பு: இந்த ஆண்டின் அரையாண்டுக்கு பிறகு அதாவது இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு இந்த கட்டண உயர்வு இருக்கும் என்று தெரிகிறது. இதுபோக மொபைல் சேவை கட்டணத்தையும் செல்போன் நிறுவனங்கள் 20 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் வரும் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இந்த கட்டணம் உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் அதிக அளவிலான கட்டணத்தை வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் புலம்பி வரும் நிலையில், தற்போது 5 ஜி சேவைக்கான கட்டணம் 10 - சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications