போன் பண்ணுவது யாராக இருந்தாலும் தெரிஞ்சுடும்.. டெலிகாம் நிறுவனங்களுக்கு வரும் கட்டுப்பாடு
சென்னை: செல்போனுக்கு அழைப்பு விடுப்பவர்களின் விவரங்களை காட்டும் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான இறுதி பரிந்துரையை மத்திய அரசிடம் டிராய் சமர்பித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை பயனர்களுக்கு அளிப்பது கட்டாயம் ஆக்கப்படும் எனத் தெரிகிறது.
செல்போனுக்கு வரும் அழைப்புகளை யார் மேற்கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ட்ரூ காலர் போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய செயலிகள், செல்போனுக்கு அழைப்பு மேற்கொள்பவர்களின் பெயர்களை கால் வரும் போதே திரையில் காட்டுகின்றன. 100 சதவிகிதம் துல்லியமாக காட்டாது என்றாலும் அழைப்பு மேற்கொள்பவர்களின் விவரங்களை ஓரளவு தெரியப்படுத்தி விடும் என்பதால் பலரும் இத்தகைய செயலிகளை பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில், தான் அழைப்பு மேற்கொள்பவர்களின் விவரங்களை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களே வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே டிராய் முன்வைத்தது. இதை எப்படி அமல்படுத்தலாம் என்பது குறித்து பல்வேறு பரிந்துரைகளை டிராய் கோரியிருந்தது. தங்களுக்கு வரும் அழைப்புகளை யார் மேற்கொள்கிறார்கள் என்ற விவரங்கள் ஒரு வாடிக்கையாளருக்கு தெரிய வேண்டியது அவசியம் என்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.
எந்த எண்ணில் சிம் கார்டு வாங்கப்பட்டதோ: நார்மல் வாய்ஸ் கால், வாட்ஸ் அப் கால், பேஸ்டைம் அல்லது வேறு ஏதாவது ஓடிடி அழைப்புகளை மேற்கொண்டாலும் அழைப்பவர்களின் பெயர் இடம் பெற வேண்டும் என்றும் இதற்கான வசதிகளை செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும் செய்ய வேண்டும் என்று டிராய் கூறியிருந்தது. இந்த நிலையில், காலர் ஐடியை அறிமுகம் செய்வது எப்படி? என்பது தொடர்பான தனது இறுதி பரிந்துரைகளை டிராய் மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
இதன்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின் பேரில், அழைப்பாளர் பெயர்களைக் காண்பிக்கும் முறையை செயல்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. டெலிகாம் நிறுவனங்களில் எந்த எண்ணில் சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளதோ அவர்களின் பெயரை திரையில் காட்டும் வகையில் இந்த காலர் ஐடி சிஸ்டம் செயல்படும் என்று தெரிகிறது.
ட்ரூ காலர் செயலிக்கு பாதிப்பு?: பயனர்களின் விருப்ப அடிப்படையில் மட்டுமே இது இயங்கும் எனத் தெரிகிறது. டிராயின் இந்த பரிந்துரைகள் தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதுவும் தற்போது வரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. டிராய் பரிந்துரைத்துள்ள இந்த புதிய வசதி அமலுக்கு வந்தால், அழைப்பவர்களின் விவரங்களை திரையில் காட்டும் ட்ரூ காலர் போன்ற செயலிகள் பெரும் பின்னடைவை சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.
எனினும், தங்கள் நிறுவனம் செல்போன் அழைப்பவர்களின் விவரங்கள் மட்டும் இன்றி இதர சேவைகளையும் வழங்கி வருவதால் தங்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது என ட்ரூ காலர் சேவை நிறுவனம் கூறி வருகிறது. இதன் காரணமாக விரைவில் இந்த சேவை பயன்பாட்டு வரலாம் என்று தெரிகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ












Click it and Unblock the Notifications