தட்டித் தூக்கிய ஜியோ.. டஃப் ஃபைட் கொடுக்கும் ஏர்டெல்.. இந்தியாவில் எத்தனை கோடி யூசர்கள் பாருங்க!
சென்னை: ஒரே மாதத்தில் 2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்று டெலிகாம் சேவையில் ஜியோ புதிய சாதனை படைத்துள்ளது. ஜியோவின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 46.97 கோடியாக உயர்ந்துள்ளது.
டெலிகாம் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய போட்டி நிறுவனங்களை விடவும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா, வாய்ஸ் கால் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை வழங்கி வருகிகிறது ஜியோ.

இதனால் மற்ற நெட்வொர்க்குகளில் இருந்து ஜியோ நிறுவனத்துக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ, 21.4 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் TRAI தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் புதிய சந்தாதாரர்களின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவின் ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 46.97 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் நம்பர் 1 டெலிகாம் நிறுவனம் என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது ஜியோ.
நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், இந்த மார்ச் மாதத்தில் 12.5 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 38.98 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேசமயம், வோடபோன் ஐடியா நிறுவனம், மார்ச் மாதத்தில் 5,41,377 வாடிக்கையாளர்களை இழந்தது. வோடபோன் ஐடியா சந்தாதாரர்களின் எண்ணிக்கை 20.5 கோடியாக உள்ளது.
மார்ச் மாதத்தில், அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) 49,177 சந்தாதாரர்களைப் பெற்றது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 9 கோடியாக உள்ளது. ஜூன் மாதத்திற்குள் 1 லட்சம் கோபுரங்களுடன் நாடு முழுவதும் தனது சொந்த 4G நெட்வொர்க்கை வெளியிட பி.எஸ்.என்.எல் தற்போது இலக்கு வைத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, மார்ச் மாதத்தில் மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 32 லட்சம் அதிகரித்து 116 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 4.86 மில்லியன் கிராமப்புற வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். அதே நேரத்தில் நகர்ப்புற சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.64 மில்லியன் குறைந்துள்ளது.
ஒழுங்குமுறை ஆணையத்தின் கூற்றுப்படி, மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களில் செயலில் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை 92.85%. பிப்ரவரியில் 106 கோடியாக இருந்த மொத்த செயலில் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 107 கோடியாக உயர்ந்துள்ளது.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications