ஐடி துறையே ஆடிப் போய் கிடக்கு.. 6 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பிய பிரபல நிறுவனம்! தலைக்கு மேல் கத்தி
நியூயார்க்: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், தனது 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்கள் எண்ணிக்கையின் 3 சதவீதமாகும். 2023ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஐடி துறையே ஆட்டம் கண்டது போல் தான் இருக்கிறது. ஏஐ வந்த பிறகு டெக் துறையில் புரட்சி ஏற்பட்டாலும், அது ஊழியர்களை வேலையை காலி செய்து வருவது பலரையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது. எப்போது யார் வேலை போகும் என்பதே தெரியாத அளவுக்கு ஐடி ஊழியர்கள் நிலை உள்ளது.
கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட தனது ஊழியர்களை அடிக்கடி வேலையை விட்டு நீக்கி வருகிறது. அந்த வகையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், தனது 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்கள் எண்ணிக்கையின் 3 சதவீதமாகும். 2023ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய காலகட்டங்களில், டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளில் மைக்ரோசாஃப்ட் கணிசமான வளர்ச்சி பெற்றிருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான மூலதனத்தை அதிகரிக்க, செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணி நீக்கம் தொடர்பாக மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட அறிக்கையில், "பன்முகத்தன்மை வாய்ந்த சந்தையில் நிலைத்துநிற்பதை உறுதிப்படுத்த, செயல்திறனில் மேம்பாடு தேவைப்படுவதால், நிறுவன மாற்றங்கள் அவசியமாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பணிநீக்கமானது, பணியில் குறைந்த செயல்திறன் கொண்டவர்களைக் குறிவைத்து மட்டும் அல்லாமல், நிறுவனத்தின் செயற்திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக அமேசான், கூகுள், மெட்டா ஆகியவை ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. அந்த வகையில், அமேசான்: 27,000, கூகுள் (அல்பபெட்): 12,000, மெட்டா (ஃபேஸ்புக்): 21,000, ட்விட்டர்: 7,500, டெல்: 6,650, ஐபிஎம்: 3,900 பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தொழில்நுட்ப உலகில் ஏஐ ஆதிக்கம் தொடர்ந்து அதிகரிக்கிறது. ஏஐ தொழில்நுட்பங்கள் மனிதவளத்தைத் தேவைப்படுத்தாமல் பல பணிகளை தானாகவே நிறைவேற்றும் நிலைக்கு வந்துள்ளன. இதனால் பெருமளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மெருகூட்ட, ஏஐ மற்றும் கிளவுட் கம்யூட்டிங் சேவைகளில் கவனம் செலுத்துகின்றன. இதன் காரணமாக் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கங்களை அதிகரித்து வருகின்றன.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications