Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குக்கிராமத்திலும் அதிவேக இன்டர்நெட்.. அதுவும் மிக குறைந்த விலையில்.! புது பிளானை இறக்கும் ஜியோ! வாவ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் இருக்கும் அனைத்து கிராமங்களிலும் இணையச் சேவையை வழங்கும் வகையில் ஜியோ நிறுவனம் புதிதாக ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது இணையம் இல்லாமல் எந்தவொரு வேலையும் நடக்காது என்ற நிலையே இருக்கிறது. அதிவேக இணையம் என்பது இப்போது கிட்டதட்ட அடிப்படைத் தேவையாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

 Reliance Jio launches JioSpace Fiber to provide internet services in rural areas in India

இருப்பினும், பல்வேறு காரணங்களால் இப்போது கிராமப்புற பகுதிகளில் டிக்கெட்கள் கிடைப்பதில்லை. இந்தப் பிரச்சினையைச் சரி செய்யும் வகையில் ஜியோ நிறுவனம் புதிதாக ஒரு கருவியை அறிமுகம் செய்கிறது.

ஜயோ ஸ்பேஸ் பைபர்: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் சாட்டிலைட் அடிப்படையிலான இணையச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஜியோ ஸ்பேஸ் பைஃபர் (JioSpaceFiber) என்று பெயரிடப்பட்டுள்ளது. நமது நாட்டில் இதற்கு முன்பு இணையச் சேவையே இல்லாத பகுதிகளுக்கும் இந்த ஜியோ ஸ்பேஸ் பைஃபர் அதிவேக பிராட்பேண்ட் வசதியைக் கொண்டு சேர்க்கிறது. டெல்லியில் நடைபெறும் இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இது இந்தியாவின் டிஜிட்டல் தளத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. ​​ரிலையன்ஸ் ஜியோ இப்போது ஏற்கனவே 45 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் ஜியோவுக்கு தேவையான அடுத்தகட்ட பாய்ச்சலை நிச்சயம் கொடுக்கும்.

மூன்றாவது கருவி: ஏற்கனவே ஜியோவிடம் ஜியோ பைபர் மற்றும் ஜியோ ஏர் பைபர் இருக்கும் நிலையில், அந்த வரிசையில் இப்போது ஜியோ ஸ்பேஸ் ஃபைபரும் இணைந்துள்ளது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் அதிவேக இணையச் சேவையை இது உறுதி செய்வதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். செயற்கைக்கோள் நெட்வொர்க் என்பது மொபைல் பேக்ஹால் திறனையும் அதிகரிக்கும். இதன் மூலம் நாட்டின் மிகத் தொலைதூர பகுதிகளில் கூட ஜியோவின் 5ஜி சேவை கிடைக்கும்.

இதற்காக ஜியோ நிறுவனம் முன்னணி செயற்கைக்கோள் ஆபரேட்டரான எஸ்இஎஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. எஸ்இஎஸ் நிறுவனம் தனது அதிநவீன நடுத்தர சுற்றுப்பாதை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திற்கான அணுகலை ஜியோவிற்கு வழங்குகிறது. இணையத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதையே இது வரும் காலத்தில் நிச்சயம் மாற்றியமைக்கும். இதன் தொழில்நுட்பம் மூலம் இணையச் சேவையை வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ இருக்கும்.

அதிவேக சேவை: இதன் மூலம் ஜியோ நிறுவனத்தால் நாடு முழுக்க குறைவான விலையில் அதிவேக சேவையை வழங்க முடியும். பெரும்பாலான நேரங்களில் இந்த ஜியோ ஸ்பேஸ் ஏர் ஃபைபர் மூலம் நல்ல வேகத்தில் இணையம் கிடைக்கும் என்று ஜியோ தரப்பில் கூறப்படுகிறது.. குஜராத்- கிர், சத்தீஸ்கர்- கோர்பா, ஒடிசா- நபரங்பூர், அசாம்- ஜோர்ஹட் என நான்கு கிராமத்தில் ஏற்கனவே ஜியோ இந்த ஏர் ஸ்பேஸ் ஃபைபர் மூலம் தனது இணையச் சேவையை ஆரம்பித்துவிட்டது.

 Reliance Jio launches JioSpace Fiber to provide internet services in rural areas in India

இந்த தொழில்நுட்பம் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், அவை தொலைதூர பகுதிகளாக இருந்தாலும் இணையச் சேவை கிடைப்பதை உறுதி செய்யும். அதுவும் குறைந்த விலையில் கிடைக்கும். அதேநேரம் வயர்லெஸ் இணையத்தில் எப்போதுமே நம்மால் பிராட்பேண்ட் வேகத்திற்கு இணையச் சேவையைப் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்தளவுக்கு வேகம் கிடைக்காது என்றால் பிறகு எதற்கு இந்த தொழில்நுட்பம் நேரடியாக பிராட்பேண்ட் போடலாமா என்ற கேள்வி வரும்.

பொதுவாக கிராமப் பகுதிகளில் பிராட்பேண்ட் அமைத்தால் லாபம் வராது என்பதால் எந்தவொரு நிறுவனமும் மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் இந்தப் பகுதிகளில் பிராட்பேண்ட் சேவை அமைக்க மாட்டார்கள். அதுபோன்ற இடங்களில் இந்த ஸ்பேஸ் பைபர் பெரியளவில் உதவும்.எனவே, அதுபோன்ற கிராமங்கள் குறைந்த செலவில் இணைய அணுகலைப் பெற வேண்டுமானால் இது சிறந்த வழியாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+