சிம் கார்டு வாங்க இனி இந்த ஆவணம் கட்டாயம் ஆகிறதா.. புதிய மசோதா சொல்வது என்ன? விவரம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று தொலைத்தொடர்பு மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் சிம்கார்டு வாங்க இனி பயோமெட்ரிக் தகவல்கள் பெறுவது அவசியம் என்ற விதி இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் நேற்று முடிவுக்கு வந்தது. கூட்டத்தொடர் இன்று வரை நடைபெறும் முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் வண்ண புகைக்குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாள்தோறும் அமளியில் ஈடுபட்டன.

இதனால், லோக்சபாவில் 97 எம்.பி.க்களும், 46 ராஜ்யசபா எம்.பி.க்களும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மொத்தம் 146 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் இப்படி நிகழ்ந்தது இல்லை. நாடாளுமன்றத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக நேற்று டெலிகாம் மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக புதிதாக சிம்கார்டு வாங்க தேவையான அடையாள சான்று பயோமெட்ரிக் என்று மசோதாவில் ஷரத்து இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஒய்.சிக்கு பயோமெட்ரிக் ஆவணம் பெறுவது என்பது தற்போது ஆதார் மூலமாக மட்டுமே பெற முடியும். எனவே, இனி சிம்கார்டு வாங்க ஆதார் பயோமெட்ரிக் தகவல் அளிப்பது கட்டாயம் ஆகும் என்பதை அனுமானிக்க முடிகிறது.
தற்போது ஆதார் கார்டு வாங்க அனைத்து கடைகளிலும் ஆதார் விவரங்களையே கேட்கிறார்கள். இருந்தாலும் தற்போது ஆதார் விவரங்கள் என்பது சிம்கார்டு பெற கட்டாயம் இல்லை. ஆனால், மசோதாவில் இடம் பெற்று இருக்கும் இந்த புதிய அம்சம் மூலமாக ஆதார் விவரம் இன்றி சிம்கார்டு பெற முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. புதிய சிம்கார்டு வாங்க வாடிக்கையாளரின் பயோமெட்ரிக் விவரங்கள் அவசியம் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் மசோதா சட்டமான பிறகு வெளியிடப்படும் விவரங்களை வைத்த இதை உறுதியாக கூற முடியும்.
தொலைத்தொடர்பு மசோதா 2023 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா இனி குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாகும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications