சிம் கார்டு வாங்கும் போது தப்பித்தவறி இந்த தப்பை பண்ணிடாதீங்க.. அப்புறம் கம்பிதான் எண்ணனும்
டெல்லி: போலியான ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று தொலைத்தொடர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இன்று ராஜ்யசபாவில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொலைத்தொடர்பு மசோதா 2023- ஐ தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அது குறித்த விவரம் வருமாறு:-

கே.ஒய்.சி எனப்படும் உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் என்பதில் கடுமையான விதிமுறைகளை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல், போலியான ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
3 ஆண்டுகள் சிறை: தொலைபேசி எண்ணில் மோசடி செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். வேறு நபரின் அடையாள சான்றை பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். தொலைத்தொடர்பு கட்டமைப்பை அமைக்க பொது சொத்தாக இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட காலவரையறைக்க்குள் அனுமதி வழங்குவது அவசியம். தனிநபர் சொத்தாக இருந்தால் உரிமையாளருக்கும் தொலை தொடர்பு கட்டமைப்பை நிறுவும் நபருக்கும் இடையே பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.
டெலிகம்யூனிஷேகன் நெட்வொர்க்கை சேதப்படுத்தினால் சேதத்திற்கு இழப்பீடும் கொடுப்பதோடு சேர்த்து 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாக்கப்படும்.
100 எம்பிக்கள் சஸ்பெண்ட்: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நடப்பு கூட்டத்தொடரின் போது அவைக்குள் இருவர் அத்துமீறி வண்ண புகைக்குண்டுகளை வீசிய விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இந்த சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமலே பெரும்பாலான மசோதாக்கள் நிறைவேறின.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications