Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிம் கார்டு வாங்கும் போது தப்பித்தவறி இந்த தப்பை பண்ணிடாதீங்க.. அப்புறம் கம்பிதான் எண்ணனும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போலியான ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று தொலைத்தொடர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இன்று ராஜ்யசபாவில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொலைத்தொடர்பு மசோதா 2023- ஐ தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அது குறித்த விவரம் வருமாறு:-

Three years in jail for purchasing a SIM card using forged documents Telecom Bill 2023 passed in Parliament

கே.ஒய்.சி எனப்படும் உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் என்பதில் கடுமையான விதிமுறைகளை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல், போலியான ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

3 ஆண்டுகள் சிறை: தொலைபேசி எண்ணில் மோசடி செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். வேறு நபரின் அடையாள சான்றை பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். தொலைத்தொடர்பு கட்டமைப்பை அமைக்க பொது சொத்தாக இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட காலவரையறைக்க்குள் அனுமதி வழங்குவது அவசியம். தனிநபர் சொத்தாக இருந்தால் உரிமையாளருக்கும் தொலை தொடர்பு கட்டமைப்பை நிறுவும் நபருக்கும் இடையே பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.

டெலிகம்யூனிஷேகன் நெட்வொர்க்கை சேதப்படுத்தினால் சேதத்திற்கு இழப்பீடும் கொடுப்பதோடு சேர்த்து 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாக்கப்படும்.

100 எம்பிக்கள் சஸ்பெண்ட்: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நடப்பு கூட்டத்தொடரின் போது அவைக்குள் இருவர் அத்துமீறி வண்ண புகைக்குண்டுகளை வீசிய விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இந்த சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமலே பெரும்பாலான மசோதாக்கள் நிறைவேறின.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+