சிம் கார்டு வாங்கும் போது தப்பித்தவறி இந்த தப்பை பண்ணிடாதீங்க.. அப்புறம் கம்பிதான் எண்ணனும்
டெல்லி: போலியான ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று தொலைத்தொடர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இன்று ராஜ்யசபாவில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொலைத்தொடர்பு மசோதா 2023- ஐ தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அது குறித்த விவரம் வருமாறு:-

கே.ஒய்.சி எனப்படும் உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் என்பதில் கடுமையான விதிமுறைகளை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல், போலியான ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
3 ஆண்டுகள் சிறை: தொலைபேசி எண்ணில் மோசடி செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். வேறு நபரின் அடையாள சான்றை பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். தொலைத்தொடர்பு கட்டமைப்பை அமைக்க பொது சொத்தாக இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட காலவரையறைக்க்குள் அனுமதி வழங்குவது அவசியம். தனிநபர் சொத்தாக இருந்தால் உரிமையாளருக்கும் தொலை தொடர்பு கட்டமைப்பை நிறுவும் நபருக்கும் இடையே பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.
டெலிகம்யூனிஷேகன் நெட்வொர்க்கை சேதப்படுத்தினால் சேதத்திற்கு இழப்பீடும் கொடுப்பதோடு சேர்த்து 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாக்கப்படும்.
100 எம்பிக்கள் சஸ்பெண்ட்: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நடப்பு கூட்டத்தொடரின் போது அவைக்குள் இருவர் அத்துமீறி வண்ண புகைக்குண்டுகளை வீசிய விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இந்த சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமலே பெரும்பாலான மசோதாக்கள் நிறைவேறின.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications