ஜோவிகா அப்பா யார்..? வனிதா விஜயகுமாரை சீண்டிப் பார்க்கும் பயில்வான் ரங்கநாதன்.. குவியும் கருத்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் வனிதாவின் மகள் ஜோவிகாவின் அப்பா யார் என்று பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதர் கேள்வி எழுப்பி பிரச்சனையை தொடங்கி இருக்கிறார்.
ஏற்கனவே பல நடிகர்கள், நடிகைகள் பற்றி தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துக்களை பேசிக் கொண்டிருக்கும் பயில்வான் ரங்கநாதன் இப்போது நடிகை வனிதா விஜயகுமார் தான் நவீன பாஞ்சாலி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு நடிகை வனிதா லைவில் தன்னுடைய இரண்டு கணவர்களிடமும் தொடர்பில் இருக்கிறேன் என்று கூறியதாக சொல்லி பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்த நிலையில் இப்போது சமீப காலமாகவே youtube சேனல் மூலமாக பல நடிகர்கள் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றியும் சர்ச்சை கருத்துகள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இப்போது நடிகை வனிதா விஜயகுமார் பற்றி வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் வனிதா விஜயகுமார் தான் நவீன பாஞ்சாலி ஏனென்றால் அவர் சமீபத்தில் லைவ் வீடியோவில் தான் தன்னுடைய இரண்டு கணவர்களிடமும் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் என்று பேசி இருக்கிறார். வனிதாவின் அப்பாவான விஜயகுமார் தன்னுடைய இரண்டு மனைவிகளின் கழுத்தில் கை போட்டபடி சிலை ஒன்று செய்து வைத்திருக்கிறார். அவர் தனக்கு ரெண்டு பொண்டாட்டி என்பதை உலகறிய செய்தது போல அவருடைய மகள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதாவின் மகளான ஜோவிகா ஒருமுறை சண்டையில் பேசிக் கொண்டிருக்கிறார். நான் என்னுடைய அப்பா பேச்சையும் கேட்க மாட்டேன் அம்மா பேச்சையும் கேட்க மாட்டேன். என்னுடைய அம்மாவிற்காக 10 வயதில் போலீஸுடன் நான் சண்டை போட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அந்த ஜோவிகாவின் அப்பா யார் என்று தெரியுமா? நடிகர் ஆகாஷ் தான் ஜோவிகாவின் அப்பா என்று வனிதா சொல்கிறார்.
ஆனால் வனிதாவின் இரண்டாவது கணவர் ஜோவிகா ஆகாஷூக்கும் பிறக்கவில்லை, எனக்கும் பிறக்கவில்லை அது வேறொருவருக்கு பிறந்தது என்று சொல்கிறார். அப்படி என்றால் உண்மையில் ஜோவிகாவின் அப்பா யார் என்பது வனிதாவிற்கு மட்டும்தான் தெரியும் என்று அந்த வீடியோவில் இன்னும் பல விஷயங்களையும் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து வனிதா பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications