என் பொண்டாட்டிய லவ் பண்றியானு சூர்யா மிரட்டினாரு! கஷ்டமா இருந்துச்சு, டூரிஸ்ட் ஃபேமிலி பிரபலம் ஓபன்
சென்னை: கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகி டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் நடிகர் சூர்யா தன்னை சூட்டிங் ஸ்பாட்டில் வந்து மிரட்டினார், அதுவும் நீ என் பொண்டாட்டிய லவ் பண்றியா என்று கேட்டு மிரட்டினாரு என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பலருடைய ஃபேவரைட் ஜோடிகளில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இருக்கிறார்கள். பல நடிகர்கள் நடிகைகள் ஒன்றாக நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த தம்பதியும் பல வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த நேரத்தில் இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் ஜோதிகா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

ராட்சசி திரைப்படம்
அதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜோதிகா மற்றும் சூர்யா பற்றி டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட நடிகர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுவன் கமலேஷ் இப்போது டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
ஜோதிகாவுடன் நடிப்பு
அவர் ஜோதிகாவுடன் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து சமீபத்தில் பேசி இருக்கிறார். திரைப்படத்தில் நான் ஜோதிகா மேடம் உடன் நடிக்கும் போது ஒரு முறை சூர்யா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார். வந்ததும் யார் அவன் கதிர் என்று கேட்டார். ராட்சசி படத்தில் என்னுடைய பெயர் கதிர் அதனால் அவர் அப்படியே கூப்பிட்டார். கதிரை கூப்பிடுங்க என்று சொன்னதும் அங்கிருந்தவர்கள் ஏன் இவர் வந்ததும் இப்படி சொல்கிறார் என்று குழப்பத்தில் இருந்தனர்.

சூர்யா கேட்ட கேள்வி
நானும் கொஞ்சம் பயத்தோடுதான் அவர் முன்பு சென்றேன். அவர் என்னை பார்த்து என்ன என் பொண்டாட்டியை நீ லவ் பண்றியா? நைட் உன்னை பத்தி தான் பேசுறா என்று சொன்னாரு. அதற்கு நான் இல்ல சார் அப்படி நடிக்கச் சொன்னாங்க, அதான் அப்படி நடிச்சேன் என்று சொன்னேன். அதற்கு அவர் நான் சும்மா மிரட்டி பார்த்தேன், சாப்டியா என்று கேட்டார். சூர்யா சார் முதலில் கேட்டபோது பயந்தேன் பிறகு அவர் செம ஜாலியான ஆள் என்று எனக்கு தெரிந்தது.

ராக்ஸ்டார்
ஜோதிகா மேடம் என்னுடைய பிறந்த நாளுக்காக ஒட்டுமொத்த செட்டுக்கும் பிரியாணி போட்டார். அவரும் என் மீது பாசமாக இருப்பார் என்று அந்த பேட்டியில் கமலேஷ் பேசியிருக்கிறார். கமலேஷ் ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு ராக்ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இப்போது நடிகர் விஜயின் மகன் இயக்கும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அதற்கு குறித்து கூட பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்து கமலேஷ் பலருடைய செல்ல பிள்ளையாக மாறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications