நடிகை ஜோதிகாவுக்கு ஜோடியான நடிகர் மிர்ச்சி செந்தில்.. புகைப்படத்தோடு சொன்ன மகிழ்ச்சி செய்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் முதல் பாகத்தில் சரவணனாக நடித்து பிரபலமடைந்த நடிகர் மிர்ச்சி செந்தில் தற்போது நடிகை ஜோதிகாவோடு தான் நடிப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
மிர்ச்சி செந்தில் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் லேட்டஸ்ட் ஆக அவர் கொடுத்த அப்டேட்டுக்கு அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான மதுர சீரியலில் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி அதைத்தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக சரவணன் கேரக்டரில் ரசிகர்களின் மனதை பல வருடங்களாக கவர்ந்து வந்த மிர்ச்சி செந்தில் அதைத் தொடர்ந்து அந்த சீரியலில் அவரோடு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் செந்தில் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து பெரிய அளவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் சின்னத்திரையை நோக்கி அடியெடுத்து வைத்தார். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் விஜய் டிவியில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு இந்த சீரியல் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது பாகமும் ஒளிபரப்பாகி அதுவும் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென்று அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜோதிகாவோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது ஒரு பிஸ்கட் கம்பெனி விளம்பரத்தில் நானும் ஜோதிகாவும் ஜோடியாக நடிக்கிறோம் என்று அதில் கூறி இருக்கிறார். அத்தோடு சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஒரு சில புகைப்படங்களை மிர்ச்சி செந்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications