பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் திடீர் இறப்பு.. கண்ணீரில் குடும்பத்தினர்! இவருக்கா இந்த நிலைமை!
சென்னை: விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என்று பல சேனல்களில் சீரியல்களில் நடித்த நடிகர் நேத்ரன் சில மாதங்களாகவே புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சீரியல் நடிகர் நேத்ரன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அண்ணன் கேரக்டரில் நடித்து வந்தார். அதுபோல சீரியல்கள் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.

நேத்ரனின் மனைவி தீபா விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் உட்பட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இந்த தம்பதியின் மகள் அபிநயா கனா காணும் கானங்கள் சீரியலில் நடித்திருக்கிறார்.

நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அபிநயா சில மதங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு தன்னுடைய தந்தை மீண்டு வந்து கொண்டிருக்கிறார் என்று தன்னம்பிக்கையாக பேசி இருந்தார். ஆனால் இன்று அவர் இறந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications