Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாதஸ்வரம் சீரியல் “பாண்டி” ஞாபகம் இருக்கா? அவருடைய மனைவிக்கு திடீர் ஆபரேஷன்.. அவரே கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் பாண்டி கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் பாண்டி கமல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய மனைவி குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார். தன்னுடைய மனைவிக்கு சமீபத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது குறித்து அதில் அவர் பேசியிருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சன் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடித்த நடிகர்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் பிரபலம் ஆக இருக்கின்றனர். அந்த வகையில் தான் யாராலும் மறக்க முடியாத நாதஸ்வரம் சீரியலில் நடித்த பல நடிகர்கள் இருக்கின்றனர். அதிலும் பாண்டி கேரக்டரில் பலருடைய திட்டல்களை வாங்கிக் கொண்டிருந்த நடிகர் பாண்டி கமல் நாதஸ்வரம் சீரியலுக்குப் பிறகு எத்தனையோ சீரியல்களில் நடித்திருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரம் புகழும் அவருக்கு நாதஸ்வரம் சீரியலில் தான் அதிகமாக கிடைத்தது.

Actor Pandi Kamal talks about his wife s recent surgery

சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா என்ற சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல நடிகராக மட்டுமல்லாமல் ஆர்ஜேவாகவும், விஜேவாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் பாண்டி கமல் தன்னுடைய மனைவி மருத்துவமனையில் இருப்பது போன்ற ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்த நிலையில் எல்லோரும் என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து பாண்டி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் தன்னுடைய மனைவிக்கு வேறு எதுவும் பெரிய பிரச்சனை இல்லை. ஒரு கட்டி இருந்தது அதற்காக சர்ஜரி செய்தோம். இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. அந்த கட்டியை டெஸ்ட்க்கு அனுப்பி இருந்தோம். அங்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ரிசல்ட் வந்திருக்கிறது என்று பாண்டி கமல் கூறியிருக்கிறார்.

அதோடு மனைவிக்கு செய்யப்பட்ட ஆபரேஷன் தையல் இன்னும் பிரிக்கப்படவில்லை என்றும் தன்னுடைய மனைவியின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். அதோடு அவர் மேலும் பேசுகையில் 15 வருடங்கள் கழித்தாலும் கூட நாதஸ்வரம் சீரியலில் பாண்டி என்ற கேரக்டர் இன்னும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுள்ளது‌. தனக்கு கடவுள் நேரடியாக வந்து உதவி செய்யாமல் திருக்குமரன் சார் மூலமாக வந்து உதவி செய்தார் என்றும் கூறியிருக்கிறார்.

நாதஸ்வரம் சீரியல் மூலமாகத்தான் நான் பிரபலமாகி தற்போது ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் என்று சந்தோஷமாக பேசி இருக்கும் பாண்டி கமல் தன்னுடைய மகள் பிறந்த நாளுக்காக இயக்குனர் திருமுருகனை கூப்பிட போயிருந்தார்களாம். அப்போது அவர் அடுத்த சீரியலுக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இருக்கிறார் என்றதும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நாங்கள் மேனேஜரிடம் சொல்லிவிட்டு திரும்பி வந்து விட்டோம். ஆனால் அவர் நேரில் அழைப்பு கொடுக்கவில்லை என்றாலும் முதல் நாளாக வந்து என்னுடைய மகளுக்கு தங்க கம்மல் பரிசு கொடுத்தார் என்று திருமுருகன் குறித்து நடிகர் பாண்டி கமல் பெருமையுடன் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+