Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சன் டிவி பெரிய சீரியலில் சம்பளம் தரல! அங்கே இது தான் நடக்குது.. திடீரென சீரியலை விட்டு விலகிய நடிகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் சில வாரங்களுக்கு முன்புதான் கதாநாயகன் சீரியலை விட்டு விலகி இருந்தார். அதற்கு அவர் தனக்கு பர்சனல் காரணத்தால் தான் சீரியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் கதாநாயகனின் அப்பாவாக நடித்து வந்த நடிகரும் திடீரென்று சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

அதே நேரத்தில் தான் சீரியலில் இருந்து பர்சனல் காரணத்தால் விலகவில்லை என்றும் தனக்கு சீரியல் தரப்பினர்கள் சில மாதங்களாகவே சம்பளம் தரவில்லை என்றும் பல்வேறு குற்றசாட்டுகளை ரவி காந்த் வைத்திருக்கிறார் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் மலர் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் கதாநாயகனாக அக்கினியும் அவருக்கு ஜோடியாக சித்தி சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ப்ரீத்தி ஷர்மாவும் நடித்து வந்தனர். இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சீரியலின் கதாநாயகன் அக்னி தான் சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறி இருந்தார்.

Actor Ravi Kanth Resigning From Malar Serial why reason

இந்த நிலையில் அதைத்தொடர்ந்து கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் ரவிகாந்த் என்பவரும் சீரியலில் இருந்து தான் விலகி விட்டதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நீண்ட பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதோடு தான் சீரியலில் இருந்து விலகியது தன்னுடைய பர்சனல் காரணத்தால் என்று சில வதந்திகள் பரவி வருகிறது அது உண்மையை கிடையாது.

Actor Ravi Kanth Resigning From Malar Serial why reason

நான் விலகுவதற்கு சில காரணங்கள் உண்டு அது அட்மின் டீம் மற்றும் அக்கவுண்ட் டீம் தான். நான் போன் பண்ணாலும் அவர்கள் எடுக்கவில்லை. எனக்கு சம்பள பாக்கி இருக்கிறது. அது பற்றி நான் விசாரிக்கும் போது அவர்கள் அதற்கு முறையான பதில் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு மேலாக சம்பளம் தர வேண்டியது இருக்கிறது. அது பற்றி நான் பலமுறை கேட்டபோதும் கூட இன்று நாளை என்று நாளை கடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர சம்பளம் தரவில்லை.

Actor Ravi Kanth Resigning From Malar Serial why reason

ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகன் கூட இந்த பிரச்சனையினால் தான் வெளியே போனார். அதற்குப் பிறகு இந்த சீரியல் தரப்பினர்கள் திருந்தாமல் எங்களுக்கு சம்பள பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சீரியலை விட்டு வெளியே போனதும் எனக்கு பதிலாக நடிக்க வைப்பதற்காக மூன்று நடிகர்களிடம் பேசி இருக்கிறார்கள்.

Actor Ravi Kanth Resigning From Malar Serial why reason

அதற்கு அந்த நடிகர்கள் யாருக்காக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது ரவிகாந்துக்காக என்று சீரியல் தரப்பினார்கள் சொன்னதும் அவர்கள் அதிர்ச்சியாகி அவர் சீரியலை விட்டு அவ்வளவு சீக்கிரமாக வெளியே போக மாட்டாரே என்ன காரணம் என்று கேட்டதற்கு ரவி காந்துக்கு பர்சனல் பிராப்ளம் அதனால் தான் வெளியே போயிட்டார் என்று வதந்தி பரப்பி இருக்கிறார்கள்.

அதற்கு பிறகு அந்த மூன்று நடிகர்களுமே என்னிடம் ஃபோன் பண்ணி விசாரித்தார்கள். நான் உண்மையில் என்ன காரணம் என்பதை பற்றி அவர்களிடம் சொல்லி விட்டேன். அதனால் யாரும் தவறாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று ரவிகாந்த் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அதோடு ஒரு வீடியோவும் வெளியிட்டு அதிலும் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+