சன் டிவி பெரிய சீரியலில் சம்பளம் தரல! அங்கே இது தான் நடக்குது.. திடீரென சீரியலை விட்டு விலகிய நடிகர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் சில வாரங்களுக்கு முன்புதான் கதாநாயகன் சீரியலை விட்டு விலகி இருந்தார். அதற்கு அவர் தனக்கு பர்சனல் காரணத்தால் தான் சீரியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் கதாநாயகனின் அப்பாவாக நடித்து வந்த நடிகரும் திடீரென்று சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
அதே நேரத்தில் தான் சீரியலில் இருந்து பர்சனல் காரணத்தால் விலகவில்லை என்றும் தனக்கு சீரியல் தரப்பினர்கள் சில மாதங்களாகவே சம்பளம் தரவில்லை என்றும் பல்வேறு குற்றசாட்டுகளை ரவி காந்த் வைத்திருக்கிறார் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் மலர் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் கதாநாயகனாக அக்கினியும் அவருக்கு ஜோடியாக சித்தி சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ப்ரீத்தி ஷர்மாவும் நடித்து வந்தனர். இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சீரியலின் கதாநாயகன் அக்னி தான் சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் அதைத்தொடர்ந்து கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் ரவிகாந்த் என்பவரும் சீரியலில் இருந்து தான் விலகி விட்டதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நீண்ட பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதோடு தான் சீரியலில் இருந்து விலகியது தன்னுடைய பர்சனல் காரணத்தால் என்று சில வதந்திகள் பரவி வருகிறது அது உண்மையை கிடையாது.

நான் விலகுவதற்கு சில காரணங்கள் உண்டு அது அட்மின் டீம் மற்றும் அக்கவுண்ட் டீம் தான். நான் போன் பண்ணாலும் அவர்கள் எடுக்கவில்லை. எனக்கு சம்பள பாக்கி இருக்கிறது. அது பற்றி நான் விசாரிக்கும் போது அவர்கள் அதற்கு முறையான பதில் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு மேலாக சம்பளம் தர வேண்டியது இருக்கிறது. அது பற்றி நான் பலமுறை கேட்டபோதும் கூட இன்று நாளை என்று நாளை கடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர சம்பளம் தரவில்லை.

ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகன் கூட இந்த பிரச்சனையினால் தான் வெளியே போனார். அதற்குப் பிறகு இந்த சீரியல் தரப்பினர்கள் திருந்தாமல் எங்களுக்கு சம்பள பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சீரியலை விட்டு வெளியே போனதும் எனக்கு பதிலாக நடிக்க வைப்பதற்காக மூன்று நடிகர்களிடம் பேசி இருக்கிறார்கள்.

அதற்கு அந்த நடிகர்கள் யாருக்காக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது ரவிகாந்துக்காக என்று சீரியல் தரப்பினார்கள் சொன்னதும் அவர்கள் அதிர்ச்சியாகி அவர் சீரியலை விட்டு அவ்வளவு சீக்கிரமாக வெளியே போக மாட்டாரே என்ன காரணம் என்று கேட்டதற்கு ரவி காந்துக்கு பர்சனல் பிராப்ளம் அதனால் தான் வெளியே போயிட்டார் என்று வதந்தி பரப்பி இருக்கிறார்கள்.
அதற்கு பிறகு அந்த மூன்று நடிகர்களுமே என்னிடம் ஃபோன் பண்ணி விசாரித்தார்கள். நான் உண்மையில் என்ன காரணம் என்பதை பற்றி அவர்களிடம் சொல்லி விட்டேன். அதனால் யாரும் தவறாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று ரவிகாந்த் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அதோடு ஒரு வீடியோவும் வெளியிட்டு அதிலும் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications