Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை லட்சுமி தான் என்னுடைய அம்மா! என் அப்பா போலீஸ்காரர், சேலத்தில் நடந்த சம்பவம்! நடிகர் சரவணன் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகர் சரவணன், சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், தனக்குச் சினிமாவில் முதல் வாய்ப்புக் கிடைக்கக் காரணமாக இருந்த நடிகை லட்சுமி குறித்துப் பேசியுள்ளது, பலரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, வாய்ப்புக்காக அவர் செய்த துணிச்சலானச் செயல், திரையுலகில் அவர் கடந்து வந்தப் பாதையைக் காட்டுகிறது.

Saravanan bigg boss Lakshmi

நடிகர் சரவணன்

சேலத்தைச் சேர்ந்த சரவணன், ஆரம்பத்தில் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் போராட்டத்தைத் தொடங்கியவர். அவரதுத் தந்தை ரயில்வே போலீஸில் பணிபுரிந்தவர். ஆரம்பகாலத்தில், வைதேகி வந்தாச்சு, 'பொண்டாட்டி ராஜ்ஜியம்' போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானார். குறிப்பாக, சூரியன் சந்திரன் படத்தில் அவர் ஏற்று நடித்தக் கதாபாத்திரம் இவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு, குணச்சித்திர வேடங்களிலும், சில படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

சர்ச்சைகள்

பிற்காலத்தில், விஜய் டிவியின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய சர்ச்சைக்குரியக் கருத்துகளால் அவர் தற்காலிகமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்தச் சம்பவம் இவருக்குக் கடும் விமர்சனங்களைப் பெற்றுத் தந்தாலும், தனது ஆட்டத்தால் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்களைச் சம்பாதித்தார்.

லட்சுமியால் கிடைத்த முதல் வாய்ப்பு

தனது சினிமாப் பயணம் குறித்துப் பேசிய சரவணன், நடிகை லட்சுமியால் தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு குறித்துப் பேசியுள்ளார். சரவணனின் தந்தை, சேலத்தில் ரயில்வே போலீசில் வேலை பார்த்ததால் அவர் எங்கே ஷூட்டிங் நடக்கிறது, யார் வந்திருக்கிறார்கள் என்றத் தகவலை அறிந்து சரவணனிடம் சொல்லிவிடுவாராம்.

அப்படித்தான் ஒருமுறைச் சேலத்தில் நடிகை லட்சுமியும், இளையராஜாவும் ஒரு பாடல் கம்போஸ் பண்ணுவதற்காக வந்திருந்த தகவலை அவரதுத் தந்தை சரவணனுக்குச் சொல்லியிருக்கிறார். உடனே, சரவணன் தனது 40 நண்பர்களைக் கூட்டிக்கொண்டு லட்சுமி தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார். போகும்போதே, "நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்காக வாய்ப்புக் கேட்கணும்" என்று சொல்லி வைத்திருக்கிறார்.

லட்சுமி சந்திப்பு

ஹோட்டலில் அவர்களை முதலில் உள்ளே விடவில்லை. இதனால் இவர்கள் பிரச்சனை செய்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த லட்சுமி, என்ன பிரச்சனை என்று கேட்க, கூட்டமாக இருந்தவர்கள் "எங்கள் தலைவருக்கு வாய்ப்பு வேண்டும், அது கேட்டு தான் வந்தோம்" என்று சொன்னதும், லட்சுமி சிரித்துவிட்டாராம். "யார் உங்க தலைவர்?" என்று கேட்க, எல்லோரும் சரவணனைக் கை காட்டி இருக்கிறார்கள்.

பெறாத அம்மா பட்டமும்

அதன்பின் லட்சுமி, சரவணனைப் பார்த்து உட்காரச் சொல்லி இருக்கிறார். "அவங்க தலைவருக்கு என்ன தெரியும்?" என்று கேட்க, சரவணன் அப்போது ஒரு வாரப் பத்திரிக்கையில், தான் எழுதி, 250 ரூபாய் பரிசு கிடைத்திருந்தச் சிறுகதையையும், சில கவிதைகளையும் லட்சுமியிடம் கொடுத்தாராம்.

நெகிழ்ச்சி

"அதற்குப் பிறகுதான் லட்சுமி மூலமாகத்தான் தனக்குச் சினிமாவில் வாய்ப்புக் கிடைத்தது. அதனால், நடிகை லட்சுமி அம்மாதான் என்னை 'பெறாத அம்மா'," என்று அந்தப் பேட்டியில் சரவணன் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

சினிமாவில் சாதிக்க நினைப்பவர்கள் எத்தனை போராட்டங்களைச் சந்திக்கிறார்கள், யார் மூலம் எப்பொழுதுத் திருப்புமுனை ஏற்படும் என்பதற்கு சரவணனின் இந்தச் சம்பவம் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+