இன்று நடிகர் சேதுராமனின் 2ஆவது ஆண்டு நினைவு தினம்.. மனைவி போட்ட உருக்கமான பதிவு!
சென்னை: நடிகர் சேதுராமனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது மனைவி சமூகவலைதளத்தில் மிகவும் உருக்கமான பதிவை போட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அறிமுகமானவர் சேதுராமன். இவர் தோல் நோய் (Dermatologist) மருத்துவர். தனியாக ஒரு கிளினீக்கும் வைத்திருந்தார்.
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேதுராமன், வாலிபராஜா, சக்கபோடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இரண்டாவது கிளீனிக்
இவர் 2017 ஆம் ஆண்டு அண்ணா நகரில் இரண்டாவது மருத்துவமனையையும் திறந்து வைத்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு உமா என்பவரை சேதுராமன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி இரவு மாரடைப்பால் சேதுராமன் காலமானார்.

5 மாத கர்ப்பம்
இது திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கணவர் இறக்கும் போது கர்ப்பமாக இருந்த உமாவுக்கு அவர் இறந்து 5 மாதங்களில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பார்த்த உமா, மீண்டும் சேதுராமன் வந்துவிட்டார் என்றே பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சேதுராமனின் 2-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

உருக்கம்
இன்றைய தினம் அவரது மனைவி உமா ஒரு உருக்கமான பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் "நான் அழுதால் இந்த உலகை விட்டு திடீரென பிரிந்த அவரது ஆன்மாவிற்கு மிகுந்த வலியை கொடுக்கும் என்பதை புரிந்து கொண்டேன். நாம் ஒரு ஆன்மாவை மட்டும்தான் இழந்தோம். ஆனால் அந்த ஆன்மாவோ தான் சம்பாதித்து வைத்த அத்தனை ஆன்மாக்களையும் இழந்துவிட்டது.

வலி யாருக்கு?
அதனால் யாருக்கு வலி அதிகம்? ஒரு உயிரை இழந்த உங்கள் வாழ்க்கையா, இல்லை அனைத்து உறவுகளையும் இழந்த அவரின் வாழ்க்கையா? நினைவுகள்தான் விஷயமே என பதிவிட்டுள்ளார். இது ஒரு உறவை இழந்த நிறைய பேருக்கு ஆறுதல் கூறும் பதிவாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications