யாருன்னு தெரியாது, ஆனால் சோறு போட்டதாக சொல்லுறாங்க.. மோசமான அந்த செயல்! வருத்தப்பட்ட சூரி
சென்னை: நடிகர் சூரி ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து இப்போது சினிமாவில் முக்கிய பிரபலமாக மாறி இருக்கிறார். அவர் ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புக்காக பல வேலைகள் செய்திருந்தார். அப்போது சூரிக்கு உதவியதாக சிலர் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது குறித்து சமீபத்தில் சூரி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.
பொதுவாக ஒரு சிலர் எவ்வளவோ கஷ்டப்படுவார்கள், அப்போது யாரும் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். ஆனால் கஷ்டப்பட்டவர் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு அந்த நபர் யார் தெரியுமா? எங்க சொந்தக்காரன் தான், எங்க பங்காளி... எங்க ஒன்னு விட்ட சித்தியோட அத்தை மகன் என்று பல உறவு முறைகளையும் கொண்டாடி வருவார்கள். இது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பலரும் பார்த்து இருப்போம்.

சூரியின் ஆரம்ப காலம்
அதே போல ஆரம்பத்தில் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்பதற்காக மதுரையில் இருந்து சூரி சென்னைக்கு வந்து பல கஷ்டங்கள்பட்டு இருந்தார். ஆரம்பத்தில் பெயிண்ட் அடிப்பது, எலக்ட்ரீசியன் வேலை, ஹோட்டல் வேலை என்று பல வேலைகளை செய்திருந்தார். சினிமாவிலும் பல எடுபுடி வேலைகளை செய்து இருக்கிறார். பலரிடம் கெஞ்சி கூத்தாடி சின்ன சின்ன வேடங்களில் நடிக்க தொடங்கி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
பரோட்டா சூரி
அதற்கு பிறகு சூரி என்பதை விடவும் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதற்கு முன்பு சீரியல், சினிமா என்று இவர் பல இடங்களில் நடித்திருந்தாலும் எதிலுமே இவருடைய முகம் யாருக்கும் நினைவில் கிடையாது. ஆனால் ஒரு திரைப்படம் இவருக்கு ஹிட் ஆனதும் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூரியை ஒரு காமெடி நடிகனாக காட்டியது.
கதாநாயகனாக அவதாரம்
அதற்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா என்று பலருடைய படங்களிலும் காமெடி கேரக்டரில் நடித்து வந்தார். இவருடைய காமெடி வாழ்க்கையை வெற்றிமாறன் அப்படியே மாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். விடுதலை திரைப்படத்தில் சூரியின் வித்தியாசமான நடிப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
சூரியின் ஹிட் திரைப்படங்கள்
அதற்குப் பிறகு விடுதலை 2, கருடன், மாமன் போன்ற பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். தனக்கு பேசுவதற்கு எந்த மேடை கிடைத்தாலும் தான் ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்கள் இப்போது தனக்கு இருக்கும் வசதி குறித்து பெருமையாகவும் அதே நேரத்தில் ஓவர் பில்டப் இல்லாமலும் சூரி பேசுவார். தன்னைப்போல பலரும் சாதிக்க வேண்டும் என பேசுவார்.
தன்னம்பிக்கை வார்த்தை
இன்று கஷ்டப்படுபவர்களுக்கு நாளை கண்டிப்பாக வாழ்க்கை மாறும், நம்முடைய உழைப்பை மட்டுமே நாம் எப்போதும் நம்பிக் கொண்டிருக்க வேண்டும். அதில் உண்மையாக மட்டும் இருந்தால் போதும் கண்டிப்பாக வாழ்க்கை மாறும் என்று தன்னம்பிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சூரிக்கு ஆரம்ப காலகட்டத்தில் நான் உதவினேன், நான் சாப்பாடு கொடுத்தேன், நான் துணி வாங்கிக் கொடுத்தேன் என்று சிலர் பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சூரியின் பேட்டி
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சூரி என்கூட நிறைய பேர் பழகி இருக்காங்க அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் என்னை பார்க்காதவங்க பழகாதவங்க கூட சூரி வருவான் நான் அவனுக்கு என் சட்டை பாக்கெட்டில் இருந்து பணத்தை எண்ணி கூட பாக்காம அள்ளி கொடுப்பேன், அவனுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பேன் என்று தற்பெருமையாக சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதெல்லாம் பார்க்கும்போது எனக்கு சிரிப்பு தான் வருது.

வீண் விளம்பரம்
ஒருத்தன் கீழே இருந்து கஷ்டப்பட்டு இருந்து மேலே வரும்போது எங்க வேணாலும் யாரு வேணாலும் ஜாயிண்ட் அடிக்கணும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு. உதவி செய்தவர்கள் அது பற்றி பேசினால் சந்தோஷம். இதே போல இன்னும் சிலர் உதவ வேண்டும் என்று நினைக்கலாம் ஆனால் யாருன்னு தெரியாதவர்கள் கூட நான் உதவினேன் என்று சொல்வது தான் பார்க்க வேதனையாகவும், கடுப்பாகவும் இருக்கிறது என்று அந்த பேட்டியில் சூரி பேசியிருக்கிறார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications