என் வாழ்க்கை சீரழிய காரணமே எங்க அப்பா தான்.. அவங்க பேச்சைக் கேட்டதால் வந்த வினை.. வனிதா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தன்னுடைய அப்பாவான விஜயகுமாரால் தன்னுடைய வாழ்க்கை சீரழிந்து போனது என்றும் அவருடைய பிள்ளைகளில் நான் மட்டும்தான் அவருடைய பேச்சை கேட்டேன், ஆனால் அவர் என்னை பற்றி பேசவில்லை என்று சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ இப்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நடிகர் விஜயகுமார் பேட்டி ஒன்றில் தன்னுடைய மகள்கள் மற்றும் மகன் குறித்து பேசும் போது தன்னுடைய பெயரை மட்டும் அதில்
சொல்லவில்லை என்பதை சுட்டிக்காட்டி அதனால் தனக்கு இருந்த ஆதங்கத்தை வனிதா அந்த பேட்டியில் கொட்டி இருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

actor Vijayakumars daughter Vanitha saying that her life was ruined by her father

அந்த அளவில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இப்போது சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை வனிதா பற்றி இணையத்தில் பலருக்கும் தெரிந்திருக்கும். வனிதாவின் திருமண வாழ்க்கை மற்றும் குடும்ப பிரச்சனைகள் திறந்த புத்தகமாக அவரை பாலோ பண்ணும் ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். சில வருடங்களுக்கு முன்பு வனிதா மற்றும் அவருடைய குடும்பத்தினர் சண்டை பெரிய அளவில் பூகம்பமாக செய்தி சேனல்களில் வெடித்துக்கொண்டிருந்தது.

அதைத் தொடர்ந்து வனிதா இப்போது தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தன்னுடைய இரண்டு மகள்களையும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வனிதா தன்னுடைய அப்பா குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வனிதா பேசுகையில், என்னுடைய அப்பா சமீபத்தில் ஒரு பேட்டியில் என்னுடைய மகள்கள் எப்படி என்று ஒவ்வொருவர் பேரையும் சொல்லி சொல்லி இருந்தார்.

அதில் கவிதா, அனிதா, அருண் விஜய், அடுத்ததாக என் பெயரை சொல்லாமல் பிரீத்தா, ஸ்ரீதேவி என்று பேசி இருக்கிறார். நான் அந்த வீடியோவை குறைந்தது பத்து முறையாவது படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி பார்த்த வீடியோவை பார்த்துக் கொண்டிருப்பது போல பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் என்னுடைய அப்பா என்னுடைய பேச்சை கேட்ட பிள்ளைகள் என்று என் பெயரை தவிர மிச்சம் உள்ள எல்லார் பெயரையும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் வேண்டுமென்றால் என்னை பிள்ளை இல்லை என்று சொல்லலாம், என் பெயரை பேசாமல் விடலாம்... ஆனால் உலகம் அதை சொல்லாது. நான் எப்போதும் அவருடைய பிள்ளை தான். நல்லவேளையாக எனக்கு கல்யாணம் முடிந்த புதிதில் நான் என்னுடைய பெயரை என்ன மாதிரி குறிப்பிட வேண்டும் என்று கேட்டபோது நான் வனிதா விஜயகுமார் என்று சொல்லிவிட்டேன். அதனால் தான் இப்போதும் எப்போதும் என்னுடைய பெயர் அதுவாகவே இருக்கிறது.

ஒருவேளை நான் முதல் கல்யாணம் முடியும்போது வனிதா ஆகாஷ் என்று வைத்திருந்தால் தொடர்ந்து எத்தனை முறை என்னுடைய பெயர் மாறியிருக்கும்..? என்று சிரித்தபடியே வனிதா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதோடு உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய அப்பா பேச்சை கேட்ட பிள்ளை என்றால் அது நான் மட்டும்தான். அவரால் தான் என்னுடைய வாழ்க்கை சீரழிஞ்சு போச்சு.

என்னுடைய வாழ்க்கை எப்படியோ இருந்திருக்கும் அவருடைய பேச்சை கேட்டதால் தான் என்னுடைய வாழ்க்கையை இந்த நிலைமைக்கு மாறி இருந்தது என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கையில் இது சில வருடங்களுக்கு முன்பு உள்ள வீடியோவாக இருந்தாலும் இப்போது விஜயகுமார் வீட்டில் நடந்த திருமணத்தில் வனிதாவை அவர்கள் கூப்பிடாமல் ஒதுக்கி வைத்திருந்த நிலையில் இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+