பிரபல நடிகை ஹன்சிகா நாத்தனாரை சித்ரவதை செய்தாரா? போலீசுக்கு ஓடிய அண்ணி.. விஐபி வீட்டில் என்னாச்சு
மும்பை: பிரபல நடிகை ஹன்சிகா மீது போலீஸில் பரபரப்பு புகார் தரப்பட்டுள்ளது. இந்த புகாரை தந்தவர், ஹன்சிகாவின் அண்ணி ஆவார்.. இதையடுத்து, புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துரிதப்படுத்தியிருக்கிறார்களாம்.
எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடித்து பிரபலமானவர் ஹன்சிகா.. அதற்கு பிறகு வரிசையாக, குறுகிய காலத்தில் பல்வேறு படங்களில் நடித்தார்.. தெலுங்கிலும், மலையாளத்திலும் சில படங்கள் நடித்துள்ளார்..

இவர் கடந்த 2022ம் ஆண்டு தன்னுடைய தொழிலதிபரும் தன்னுடைய காதலருமான சோஹேல் கதுரியா என்பவரை, ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஹன்சிகா மீது, அவரது அண்ணி முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஹன்சிகாவின் அண்ணியும் ஒரு நடிகையாவார்.. மாதா கி சௌகி என்ற ஹிந்தி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் முஸ்கான் நான்சி ஜேம்ஸ்.
நடிகை ஹன்சிகா: நடிகை ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு, நடிகை நான்சியுடன் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, கடந்த 2 வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்..
அதாவது ஹன்சிகாவின் திருமணம் முடிந்த 10 நாட்களுக்குள், விவாகரத்து கோரி விண்ணப்பம் அளித்தார் நடிகை நான்சி. அப்போதுமுதல் தம்பதி இருவரும் பிரிந்து வருகிறார்கள். இந்நிலையில்தான், தன்னுடைய கணவர், மாமியார், நாத்தனார் மீது மும்பை போலீசில் புகார் தந்துள்ளார் நான்சி.
தலையீடுகள்: அந்த புகாரில் "ஹன்சிகாவும், அவரின் அம்மா மோனாவும், எங்களது இல்லற வாழ்வில் மூக்கை நுழைத்து கொண்டேயிருந்தனர். அவர்களது அதீத தலையீட்டால், என்னுடைய கணவர் பிரசாந்துடன் அளவுக்கு அதிகமாக பிரச்சனை ஏற்பட்டு, அது தீர்க்க முடியாத அளவுக்கு போய்விட்டது.. இவர்களது பேச்சை கேட்டுக் கொண்டு, கணவர் பிரசாந்த் என்னை கொடுமைப்படுத்துகிறார்.
கணவரின் கொடுமையால் எனக்கு Bell Palsy என்ற குறைபாடு, அதாவது முகத்தின் ஒரு பகுதி செயல் இழந்துவிட்டது. ஹன்சிகா, மோனா, பிரசாந்த் ஆகியோர் என்னிடமிருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை கேட்கிறார்கள். சொத்து விஷயத்தில் மோசம் செய்கிறார்கள். நான் கணவருடன் வாழ விருப்பம் தெரிவித்தும்கூட, அதற்கு அவர்கள் அனைவருமே தடையாக இருக்கிறார்கள்" என்றெல்லாம் மும்பை போலீசில், நடிகை நான்சி புகார் தந்துள்ளாராம்.
எப்ஐஆர்: இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளார்களாம்.. அதாவது ஹன்சிகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.. ஹன்சிகா, மற்றும் குடும்பத்தார் மீது FIR போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications