ஆசையா எங்களுக்காக செய்து கொடுத்தாரு.. ஆனால்! கணவர் குறித்து முதல் முறையாக மீனா சொன்ன தகவல்
சென்னை: நடிகை மீனா பேட்டி ஒன்றில் தன்னுடைய மறைந்த கணவர் வித்யாசாகர் உயிரோடு இருக்கும்போது செய்த செயல்கள் குறித்து நெகிழ்வோடு பேசி இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிப்பை தொடங்கி இப்ப வரைக்கும் முன்னணி நடிகை ஆக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய கணவர் கடந்த 2022-ல் உடல்நிலை குறைபாட்டால் காலமானார். மீனாவிற்கும் அவருடைய கணவர் வித்தியா சாகர்க்கும் கடந்த 2009 ஆம் ஆண்டில் திருமணம் நடந்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். அவர் நடிகர் விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தார்.

மீனா பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் அதிகமாக சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த நிலையில் அவருடைய கணவரின் மறைவுக்குப் பிறகு அதிகமாக பேசப்பட்டார். அதிலும் கணவர் இறந்த ஒரு சில மாதங்களிலேயே மீனா இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்று வதந்திகள் அதிகமாக பரவி வந்தது. அது குறித்து சில முறை மீனா கோபமாக மறுப்பு தெரிவித்து விளக்கமும் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவர் பற்றி அடிக்கடி செய்திகள் பரவி வருகிறது.
அதுபோல மீனாவின் கணவர் இறுதிச்சடங்கில் மீனாவும் அவருடைய மகளும் இறுதி காரியங்கள் செய்ததும் கூட அந்த நேரத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அதற்கும் மீனா தெளிவாக பதிலடி கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் அவருடைய கணவர் இறந்து சில வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது ஒரு பேட்டியில் தன்னுடைய கணவர் குறித்து மீனா உருக்கமாக பேசியிருக்கிறார். அதில் என்னுடைய கணவர் வித்யாசாகர் இருந்த வரைக்கும் அழகாக சமையல் செய்வார்.
எனக்கு சமையல் செய்ய தெரியாது என்பதால் என்னையும் கூப்பிட்டு அடிக்கடி இதை கட் பண்ணி தான் அதை கட் பண்ணி தான் என்று சொல்லுவார். ஆனால் என்னால் சரியாக சமையல் செய்ய முடியாது அவருக்கு உதவும் போதும் சில முறை நான் சொதப்பி விடுவேன். அவருக்கு பிடித்த சாப்பாடு நான் செஞ்சு கொடுத்தது கிடையாது. ஆனால் அவர் தான் எங்களுக்காக பார்த்து பார்த்து சமையல் செய்து தருவார். அதுவும் ஸ்டீல் பிஷ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை அவர் அழகாக செய்து தருவார் என்று அந்த பேட்டியில் வித்யாசாகர் குறித்து மீனா பேசியிருக்கிறார்.
அதுபோல எனக்கு என்னுடைய கணவர் தான் பெரிய நண்பராகவும் இருந்தார். நான் எந்த இடத்தில் டவுன் ஆக பீல் பண்ணினாலும் உடனே எனக்கு சரியான அறிவுரைகளை சொல்லுவார். இதை செய்யலாமா? வேண்டாமா? என்று நான் குழப்பத்தில் இருக்கும்போது எனக்கு அவர் கொடுக்கும் அறிவுரைகள் தான் பல பிரச்சனைகளில் இருந்து என்னை மீண்டு வர செய்தது என்று அந்த பேட்டியில் எமோஷனலாகவும் மீனா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications