அப்பாவும், அண்ணனும் செய்த செயல்.. நடிகை "நளினி” வாழ்க்கையில் இத்தனை சோகங்களா? துணை நின்ற ஒரே உறவு!
சென்னை: வெள்ளி திரையில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்த நடிகை தற்போது சின்ன திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "மோதலும் காதலும்" என்ற சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை நளினி பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப காலம் மற்றும் தன்னுடைய அப்பா அண்ணன்கள் தன்னுடைய வாழ்க்கையில் செய்த செயல் பற்றி பல தகவல்களை மனம் விட்டு பேசி இருக்கிறார்.
வெள்ளிதிரையில் ஒரு காலகட்டத்தில் கதாநாயகியாக ஜொலித்தவர்கள் அங்கே வாய்ப்பு கொஞ்சம் குறைய தொடங்கியதும் சீரியல் நோக்கி படையெடுக்க தொடங்குவது வாடிக்கையானது தான். அந்த மாதிரி தான் பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த நடிகை நளினி சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார். ஆனால் சின்னத்திரையில் அவருக்கு வாய்ப்பு அமோகமாக அமைந்தது.
"சின்ன பாப்பா பெரிய பாப்பா" போன்ற பல சீரியல்களில் நடிகை நளினிக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்கள் அமைந்தது. அது போல வெள்ளித்திரையைப் போலவே இவருக்கு சின்ன திரையிலும் அதிகமான ரசிகர்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட நடிகை நளினி "மோதலும் காதலும்" இந்த சீரியலில் காமெடியான கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகியிடம் மட்டும் இவர் கறாராக நடந்து கொள்ளும் இடங்களில் பலருடைய கோபத்தை சம்பாதித்துக் கொண்டாலும் தன்னுடைய மகன் மற்றும் பேத்தி மீது தனக்கு இருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லும் வகையில் இவர் அசத்தி விடுகிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து மனம்திறந்து பேசி இருக்கிறார்.
சினிமாவில் டி. ராஜேந்திரன் இயக்கத்தில் "உயிர் உள்ளவரை உஷா" என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகை நளினி அறிமுகமாகி இருந்தார். இவர் இந்த திரைப்படத்திற்கு முன்னர் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த நேரத்தில் தான் இவருக்கு விஜயகாந்த் மாதிரியான பெரிய நடிகர்களோடும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து நடிகை நளினி புகழில் உச்சத்தில் இருக்கும் போது நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு திரைத்துறையை விட்டு விலகி இருந்த இவர் மீண்டும் ராமராஜனை பிரிந்த பிறகு நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது சின்னத்திரை வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் தான் நடிக்கிறேன் என்று சொன்னதும் தன்னுடைய சொந்த வீட்டிலே பெரிய அளவில் எதிர்ப்புத் கிளம்பியது என்று பேட்டியில் நளினி பேசி இருக்கிறார்.
இவர் நடிக்க தொடங்குகிறார் என்று செய்தி தெரிந்ததும் இவருடைய அப்பாவுக்கும் அண்ணனுக்கும் அது பிடிக்காததால் நாங்கள் வீட்டை விட்டு போக போகிறோம் என்று மிரட்டினார்களாம். ஆனால் நளினி தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் அவருடைய அப்பாவும் அண்ணனும் வீட்டை விட்டே கோபித்து கிளம்பி விட்டார்களாம். அந்த நேரத்தில் தனக்கு உறுதுணையாக இருந்தது தன்னுடைய அம்மா மட்டும்தான் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications