அப்பாவும், அண்ணனும் செய்த செயல்.. நடிகை "நளினி” வாழ்க்கையில் இத்தனை சோகங்களா? துணை நின்ற ஒரே உறவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளி திரையில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்த நடிகை தற்போது சின்ன திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "மோதலும் காதலும்" என்ற சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

actress Nalini So many tragedies in the life of The only relationship that stood

இந்த நிலையில் நடிகை நளினி பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப காலம் மற்றும் தன்னுடைய அப்பா அண்ணன்கள் தன்னுடைய வாழ்க்கையில் செய்த செயல் பற்றி பல தகவல்களை மனம் விட்டு பேசி இருக்கிறார்.

வெள்ளிதிரையில் ஒரு காலகட்டத்தில் கதாநாயகியாக ஜொலித்தவர்கள் அங்கே வாய்ப்பு கொஞ்சம் குறைய தொடங்கியதும் சீரியல் நோக்கி படையெடுக்க தொடங்குவது வாடிக்கையானது தான். அந்த மாதிரி தான் பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த நடிகை நளினி சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார். ஆனால் சின்னத்திரையில் அவருக்கு வாய்ப்பு அமோகமாக அமைந்தது.

"சின்ன பாப்பா பெரிய பாப்பா" போன்ற பல சீரியல்களில் நடிகை நளினிக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்கள் அமைந்தது. அது போல வெள்ளித்திரையைப் போலவே இவருக்கு சின்ன திரையிலும் அதிகமான ரசிகர்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட நடிகை நளினி "மோதலும் காதலும்" இந்த சீரியலில் காமெடியான கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கதாநாயகியிடம் மட்டும் இவர் கறாராக நடந்து கொள்ளும் இடங்களில் பலருடைய கோபத்தை சம்பாதித்துக் கொண்டாலும் தன்னுடைய மகன் மற்றும் பேத்தி மீது தனக்கு இருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லும் வகையில் இவர் அசத்தி விடுகிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து மனம்திறந்து பேசி இருக்கிறார்.

சினிமாவில் டி. ராஜேந்திரன் இயக்கத்தில் "உயிர் உள்ளவரை உஷா" என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகை நளினி அறிமுகமாகி இருந்தார். இவர் இந்த திரைப்படத்திற்கு முன்னர் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த நேரத்தில் தான் இவருக்கு விஜயகாந்த் மாதிரியான பெரிய நடிகர்களோடும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

actress Nalini So many tragedies in the life of The only relationship that stood

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து நடிகை நளினி புகழில் உச்சத்தில் இருக்கும் போது நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு திரைத்துறையை விட்டு விலகி இருந்த இவர் மீண்டும் ராமராஜனை பிரிந்த பிறகு நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது சின்னத்திரை வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் தான் நடிக்கிறேன் என்று சொன்னதும் தன்னுடைய சொந்த வீட்டிலே பெரிய அளவில் எதிர்ப்புத் கிளம்பியது என்று பேட்டியில் நளினி பேசி இருக்கிறார்.

இவர் நடிக்க தொடங்குகிறார் என்று செய்தி தெரிந்ததும் இவருடைய அப்பாவுக்கும் அண்ணனுக்கும் அது பிடிக்காததால் நாங்கள் வீட்டை விட்டு போக போகிறோம் என்று மிரட்டினார்களாம். ஆனால் நளினி தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் அவருடைய அப்பாவும் அண்ணனும் வீட்டை விட்டே கோபித்து கிளம்பி விட்டார்களாம். அந்த நேரத்தில் தனக்கு உறுதுணையாக இருந்தது தன்னுடைய அம்மா மட்டும்தான் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+