முகம் கருப்பாகாமல் இருக்க.. நந்தினி சீரியல் நடிகை கூறும் டிப்ஸை பாருங்க... நல்லாதான் இருக்கு!
சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம் முகம் கருப்பாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
சீரியல் நடிகை நித்யா ராம், சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர். இவருடைய தந்தை கே.எஸ்.ராமு, சகோதரி ரச்சிதா ராம். நித்யா ராம் பரதநாட்டிய கலைஞராவார், இவர் பயோ டெக்னாலஜி படித்துள்ளார். ஆனாலும் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவு அழியவே இல்லை.

கன்னடா தொலைகாட்சி நிகழ்ச்சியான பெங்கியள்ளி அரளிட ஹூவு என்பதில் நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்த நித்யா ராம் தமிழில் சூப்பர் ஹிட் சீரியலான நந்தினி சீரியலில் நடித்திருந்தார்.
இவர் சன் டிவியில் சவாலே சமாளி நிகழ்ச்சியில் ஆங்கராக வந்திருந்தார். அது போல் நந்தினி குடும்பம், மசாலா கஃபே நிகழ்ச்சிகளிலும் நித்யா கலந்து கொண்டுள்ளார். அதுபோல் 2019ஆம் ஆண்டு அவ்னி தயாரிப்பில் குஷ்பு நடிப்பில் வெளியான லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணன் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தனது முகத்தை வெண்மையாக பளிச்சென வைத்திருக்க இவர் என்ன செய்வார் என்பது குறித்து விளக்கியுள்ளார். காலை, இரவு என இரு வேளைகளும் முகத்திற்கு தேவையான சீரம், சன் ஸ்கிரீன், மாய்ஸ்ரைசர் ஆகியவற்றை போடுவாராம்.

ஷூட்டிங் முடித்து எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தாலும் சரி எத்தனை அதிகாலையில் ஷூட்டிங் இருந்தாலும் இதை மட்டும் மறக்கவே மாட்டாராம். அது போல் பச்சை காய்கறிகளை அதிகம் உண்பாராம். முக அழகுக்காக சிவப்பு நிற பழங்களை அதிகம் உண்பாராம். அது போல் இளநீர், மோர் என தினமும் ஏதாவது ஒன்றை குடிப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறாராம்.
அது போல் முகத்தில் வியர்வை வந்தால் அந்த இடத்தை துடைக்காமல் தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும் என கூறியுள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2012 ஆம் ஆண்டு தமிழ் தொடரான அவள் என்ற தொடரில் ஷாலினி என்ற கதாபாத்திரம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நித்யா ராம். சில உடற்பயிற்சிகளை செய்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.












Click it and Unblock the Notifications